உதகை, ஜன.21- வார விடுமுறை நாளை முன்னிட்டு, ஞாயி றன்று உதகை அரசு தாவரவியல் பூங்கா வில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்த னர். மலை மாவட்டமான நீலகிரி சிறந்த சுற் றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் காலநிலையும், இயற்கை காட்சிக ளையும், வன விலங்குகளையும் கண்டு ரசிக்க நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், ஞாயிறன்று விடுமுறை நாள் என்பதால், தமிழ்நாடு மட்டு மின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் உதகையில் குவிந்த னர். குறிப்பாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டத் தால், பூங்கா களைகட்டியது. கிக்யூ புல் வெளியில் விளையாடி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.