districts

img

இலவச வீட்டுமனை வழங்கிடுக விவசாய தொழிலாளர் சங்கம் கோரிக்கை மனு

உடுமலை, ஜன.20- சின்னவீரம்பட்டி ஊராட்சியில் வசிக்கும் ஏழை விவசாயிகளுக்கு இல வச வீட்டுமனை வழங்கக்கோரி, விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் தலை மையில் வியாழனன்று உடுமலை வட் டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக் கப்பட்டது.  திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலூக்கா சின்னவீரம்பட்டி ஊராட்சி யில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிதிரா விடர் வகுப்பைச் சேர்ந்த ஏழை விவ சாய கூலித் தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இந்த மக்களுக்கு விவ சாய வேலைகள் கிடைக்காத  நாட்க ளில் அரசின் ஊரக வேலை உறுதித் திட் டத்தில் வேலைக்குச் சென்று அதன் மூலம் வரும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் இப்பகுதியில் வசிக் கும் ஏழை மக்களுக்கு 30 ஆண்டுக ளுக்கு முன்பு அரசு சார்பில் இலவச வீட்டு மனைபட்டா மற்றும் வீடுகள்  வழங்கப்பட்டது. இலவச வீடுகள்  வழங்கப்பட்டு முப்பது ஆண்டுகளுக் கும் மேலான நிலையில், ஒரு வீட்டில் மூன்று குடும்பங்களுக்கு மேல் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். மக் கள் தொகை அதிகமான நிலையில் வீடு  இல்லாத மக்களுக்கு அரசு சார்பில்  இலவச பட்டா மற்றும் வீடுகள் கட்டித் தர வேண்டும் என கடந்த வருடம் திருப் பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை  மனு அளிக்கப்பட்டது.  ஆனால், அதன்பின்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை யில், தமிழ்நாடு விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் தலைமையில் ஐம்பதுக் கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த  அப்பகுதி மக்கள் வியாழனன்று உடு மலை வட்டாட்சியரிடம் வீட்டுமனை கேட்டு கோரிக்கை மனு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பஞ்சலிங்கம், உடுமலை ஒன்றிய பொருளாளர் முத்துசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை நக ரக்குழு உறுப்பினர் சித்ரா, சின்னவீரம் பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர் நாக வேணி உட்பட ஏராளமானோர் கலந்து  கொண்டனர்.