திருப்பூர், நவ.21- பாஜக அரசின் தொழிலாளர் விரோத, தவறான பொருளாதார கொள் கையை கண்டிக்கும் வகையில் நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகள் முன்பு தொழிற்சங்கள் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். அப்போராட்டத்திற்கு ஆதரவாக திருப் பூர் குமரன் சிலை முன்பு வரும் நவ. 28ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங் களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்ப டும் என அனைத்து தொழிற்சங்க நிர்வா கிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட் டுள்ளது. திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாயன்று ஏஐடியுசி சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் பி.ஆர்.நடராஜன் தலைமை யில் ஏஐடியுசி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், சிஐடியு கட்டிட கட்டுமானத் தொழிலா ளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி. குமார், ஏஐடியுசி பனியன் சங்க பொதுச் செயலாளர் என்.சேகர் எல்பிஎப் மாவட் டத் துணை தலைவர் ரங்கசாமி, எல் பிஎப் அமைப்பு சாரா தொழிலாளர் சங் கத்தின் தலைவர் அறிவழகன், ஐஎன் டியூசி மாவட்ட பொதுச் செயலாளர் சிவ சாமி, ஐஎன்டியூசி மாவட்டச் செயலா ளர் மகுடபதி, எச்எம்எஸ் மாவட்டச் செய லாளர் ஆர்.முத்துசாமி, துணைச்செய லாளர் ராஜேந்திரன், எம்எல்எப் மாவட் டச் செயலாளர் மு.சம்பத், எம்எல்எப் பனியன் சங்கச் செயலாளர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ஒன்றிய பாஜக மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கை மற்றும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கை காரணமாக இந்திய நாட்டு மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் சிறு, குறு தொழில் முனைவோர் என அனைத்து தரப்பினரும் பெரும் பாதிப் புக்கு உள்ளாகி உள்ளனர். விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறைகளை தனியார் மயமாக் குவது, விவசாயிகளின் விளைபொரு ளுக்கு நியாயமான விலை வழங்க மறுப்பது, சமூக பதட்டம் உருவாக்கு வது போன்ற செயல்களில் மோடி அரசு ஈடுபட்டு வருகின்றது. ஒன்றிய அரசின் இந்த போக்கை கண்டித்து, அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் இணைந்து நாடு முழுவ தும் வரும் நவம்பர் 26, 27, 28 ஆகிய தேதி களில் ஆளுனர் மாளிகை முன்பு இரவு, பகல் தொடர் பெருந்திரள் அமர்வு போராட்டம் நடத்துவது என்ற முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் சென்னையில் நடைபெறும் போராட் டத்தில் அனைத்து சங்கங்களின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என்றும், மேற்கண்ட போராட்டத்திற்கு ஆதரவாக நவம்பர் 28 அன்று குமரன் சிலை முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர் மானிக்கப்பட்டுள்ளது.