தருமபுரி, ஆக.27- பாப்பாரப்பட்டி சின்ன ஏரியை ஆக்கிரமித் துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற வேண் டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி - பாலக்கோட்டு சாலையில், பாப்பாரப்பட்டி சின்ன ஏரி அமைந்துள்ளது. 40 ஏக்கர் பரப்ப ளவு கொண்ட இந்த ஏரிக்கு பிக்கிலி, வேப்பி லைஹள்ளி, பனைக்குளம் உள்ளிட்ட ஊராட் சிகளுக்குட்பட்ட கிராமங்கள் மற்றும் மழைக் காலங்களில் ஜெர்தலாவ் கிளை கால்வாய் மூலம் பஞ்சப்பள்ளி அணை உபரிநீர் வரு கிறது. பாப்பாரப்பட்டி சின்ன ஏரி ஆக்கி ரமிப்பு காரணமாக, மழைக்காலங்களில் மழைநீர் முழுமையாக தேங்காமல், இரு கால்வாய்கள் மூலம் தண்ணீர் சிட்ல காரன்பட்டி ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிக ளுக்கும், தருமபுரியை அடுத்த பாடி ஏரிக்கு பெயரளவுக்கு சென்று வந்தது. இதை தடுக்க பாப்பாரப்பட்டி சின்ன ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையின் மட் டத்தை உயர்த்த வேண்டும் என பாசன விவ சாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந் தனர். இதைத்தொடர்ந்து, கடந்த சில மாதங்க ளுக்கு முன் பாப்பாரப்பட்டி சின்ன ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கரை யின் மட்டம் உயர்த்தப்பட்டது. ஏரி நீர்பி டிப்பு பகுதிகளில் கோடை மழையை தொடர்ந்து, தென்மேற்கு பருவமழையும் குறிப்பிடத்தக்க வகையில் பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு மழைநீர் வரத்து அதிகரித் துள்ளது. இந்நிலையில், ஏரியில் ஆகாயத் தாமரை அதிகளவில் வளர்ந்து ஏரியை ஆக்கிரமித் துள்ளது. ஏரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை அதிகம் பெய்யும் வாய்ப்புள்ளதால் ஏரிக்கு தண்ணீர் அதிகரிக்கும். தற்போது, சின்ன ஏரியில் அதிகளவில் ஆகாய தாமரை வளர்ந் துள்ளதால், ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போது, மதகுகளில் அடைப்பு ஏற்படுவ துடன், கால்வாய்களில் நீர் அதிகளவில் செல்ல முடியாத நிலை ஏற்படும். மேலும், இந்த ஏரியிலிருந்து பிற ஏரிகளுக்கு திறந்து விடப்படும் தண்ணீருடன் ஆகாயத் தாமரை யும் சேர்ந்து பிற ஏரிகளுக்கு செல்லும் நிலை ஏற்படும். இதனால், அந்த ஏரிகளையும் ஆகாயத்தாமரை ஆக்கிரமிக்கும் அபாயம் உள்ளது. எனவே, பாப்பாரப்பட்டி சின்ன ஏரியில் வளர்ந்துள்ள ஆகாயத் தாமரை களை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல, இலக்கியம்பட்டி ஊராட்சிக் குட்பட்ட பிடமனேரியில் அதிகளவு ஆகாயத் தாமரை வளர்ந்துள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகளை ஆக்கிரமித் துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி, நீர்வ ளத்தை காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.