districts

img

பிஏபி: முறைகேடாக தண்ணீர் எடுப்பதை தடுக்க ஆலோசனை

திருப்பூர், ஆக. 13 – பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத் தில் இரண்டாம் மண்டல பாசனப் பகுதிக ளுக்குத் தண்ணீர் திறக்க உத்தேசிக்கப்பட்டி ருக்கும் நிலையில், முறைகேடாக தண்ணீர் எடுப்பதைத் தடுக்க ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் தலைமையில் ஆட்சியரகத்தில் நடை பெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அபிஷேக் குப்தா, சார் ஆட்சி யர் சௌமியா, கோட்டாட்சியர்கள் செந்தில்  அரசன், ஜஸ்வந்த் கண்ணன் உள்ளிட்ட அர சுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், பிஏபி திட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கேயம், திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் ஆகிய வட்டங்களில் பாலாறு படுகை இரண்டாம் மண்டலப் பாசன நிலங்களுக்கும், உடு மலை வட்டத்தில் பாலாறு பழைய ஆயக் கட்டு தளி வாய்க்கால் பாசனப் பகுதிகளுக் கும் தண்ணீர் திறந்து விட உத்தேசிக்கப்பட் டுள்ளது. அப்போது முறைகேடாக தண்ணீர்  எடுப்பதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோ சனை மேற்கொண்டனர்.