தருமபுரி, ஆக.20- வத்தல்மலையில் சுற்றுலா பய ணிகளை கவர்ந்து இழுக்கும் வகை யில், ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலா தலம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. தருமபுரியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வத்தல் மலை, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள் ளது. ஏற்காடு சேர்வராயன் மலைத் தொடரின் ஒரு பகுதியான வத்தல் மலை, சுமார் 225 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இந்த மலைக்காடுகளில் உள்ளூர் தாவரங் கள் மற்றும் காட்டெருதுகள், காட்டுப் பன்றிகள், நீலகிரி லங்கூர், சாம்பார் இன ஆடுகள் மற்றும் எண்ணற்ற மூலிகை தாவரங்கள் உள்ளன. வத் தல்மலையில் பெரியூர், பால்சிலம்பு, சின்னாங்காடு, குள்ளனூர், நாயக்க னூர், அரங்கனூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள் ளன. வத்தல்மலையில் காபி, மிளகு, ஆரஞ்சு, சப்போட்டா, எலுமிச்சை மற் றும் ரோஜா, செண்டுமல்லி, சாமந்தி, சில்வர் ஓக் மரங்கள் அதிகமாக உள் ளன. வத்தல்மலைக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு வரை, சாலை வசதி கிடையாது. கிராம மக்கள் அடர்ந்த வனப்பகுதியின் வழியாக 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து, அடி வாரத்தில் இருந்து பேருந்து மூலமாக தருமபுரி உள்ளிட்ட பல்வேறு இடங் களுக்கு செல்ல வேண்டியிருந்தது. சாலை வசதி கேட்டு, மலைவாழ் மக் கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மலைவாழ் மக்கள் ஒன்றுசேர்ந்து மண் சாலை அமைத்தனர். அதன் பின், கடந்த 2011-2012 ஆம் ஆண்டு அடிவாரத்தில் இருந்து வத்தல்மலை மேல் பகுதி வரை ஊரக வளர்ச்சித் துறை மற்றும் வனத்துறை சார்பில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. மலை அடிவாரத்தில் இருந்து 23 கொண்டை ஊசி வளைவுகளுடன், சாலை அமைக் கப்பட்டது. சாலை அமைத்த பின்னர், பேருந்து வசதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதை யேற்று, சாலைகள் ஆய்வு செய்து பேருந்து வசதி தொடங்கப்பட்டது. தற் போது வத்தல்மலைக்கு தினசரி பேருந்து வசதி உள்ளது.
இதனி டையே, வத்தல்மலையை சுற்றுலா தலமாக தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து ரூ.2.25 கோடி மதிப் பீட்டில் சாகச சுற்றுலா தலமாக மாற் றும் பணி தொடங்கி நடைபெற்று வரு கிறது. சுற்றுலா பயணிகள் வத்தல் மலைக்கு வந்தால் அங்கு தங்கியி ருந்து, இயற்கை அழகை ரசிக்க காட் டேஜ் அமைக்கும் பணி துரிதமாக நடக்கிறது. மேலும், பூங்கா அமைக் கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், அடிப்படை வசதிகளு டன் ஏரியில் படகு சவாரி, பார்வை கோபுரம் மற்றும் இதர பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய 89 ஏக் கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்க இடம்தேர்வு செய்யப்பட் டது. ஆனால், சில காரணங்களால் தற் போது ஒருசில இடங்களில் மட்டும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் நடக் கிறது. முதற்கட்டமாக தாவரவியல் பூங்கா அமைக்க வேண்டும். மேலும், வத்தல்மலையில் உதகை, ஏற்காடு போன்று மலர் கண்காட்சி எதிர்காலத் தில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண் டும், என்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறு கையில், தமிழக முதல்வர் வத்தல் மலையை சுற்றுலா தலமாக அறி வித்த பின்னர், சிறு சிறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலை யில், ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலா தலமாக மாற்றும் பணி தற் போது நடைபெற்று வருகிறது, என்ற னர்.