தருமபுரி, ஏப்.3- குருமா, குருமன், குரும்பா, குரு மன் கவுண்டர், குரும்பன் மற்றும் குரும்பர் மக்களை குருமன்ஸ் என பழங்குடி பட்டியலில் சேர்க்க நட வடிக்கை எடுத்திட வேண்டும் என டி.என்.வி.செந்தில்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என். வி.செந்தில்குமார், நாடாளுமன்றத் தில் தனி நபர் மசோதா தாக்கல் செய்து பேசியதாவது, இந்த தனி நபர் மசோதாவில் பல தசாப்தங்க ளாக கோரிக்கை நிலுவையில் உள்ள குருமன் மக்களின் ஒத்த சொற்களுடைய மற்றும் ஒலிப்பு மாறுபாட்டின் பண்புகளையும் கொண்டுள்ள சமூகங்களை ஒன்றி னைத்து அரசியலமைப்பு (பட்டியலி டப்பட்ட பழங்குடியினர்) ஆணை 1950, பாகம் XIV இல்,—தமிழ்நாடு, நுழைவு 18 இல் “குருமன்ஸ்” என்ற பழங்குடிப் பெயரில் மேற் கண்ட ஒத்த சொற்களுயுடைய பெயர்களை இணைக்க இம் மசோதா முற்படுகிறது. இச்சமூ கங்கள் பற்றிய இனவியல் ஆய்வு எடுக்கும் பணியை உதகமண்டலம் பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தி டம் ஒப்படைக்கப்பட்டது.
அவற் றில் சமூக அமைப்பு, குல அமைப்பு மற்றும் சுழற்சி சடங்குகள் ஆகிய வற்றின் அடிப்படையில் குரும்பா, குரும்பர், குருமன் என இவை அனைத்து பெயர்களும் ஒரே சமூகம் என்று ஆய்வு வெளிப் படுத்துகிறது. மானுடவியல் முடிவுகளின் தற்போதைய ஆய்வு மற்றும் தர்ஸ்டன் போன்ற முந்தைய எழுத்தாளர்களின் அவதானிப்பு களுடன், ஏ.ஐயப்பன், கே.எஸ்.சிங் போன்றோர் இதையே வெளிப் படுத்துகிறார்கள். குருமன், குரும்பா, குரும்பன், குரும்பர் போன்றவை ஒன்றுக்கொன்று ஒத் தவை என்றும், இந்த பெயர்கள் ஒத்த சொற்களுடைய குருமன்ஸ் சமூகத்தை குறிக்கும் என்பதையும் இது மேலும் வெளிப்படுத்துகிறது. மேலும், இவர்கள் அனைவரும் குருமன்ஸ் பெயரின் கீழ் பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்து பெற தகுதியுடையவர்கள். பழங்குடி மக்கள் மத்தியில் கல்வியறி வின்மை மற்றும் அறியாமை நிலவி யது. இதனால் அவர்கள் தங்கள் சமூகத்தின் பெயரை தவறான எழுத்துப்பிழையில் குறிப்பிட்டுள்ள னர். இவற்றை காரணம் காட்டி அவர்களின் பழங்குடி கோரிக்கை மறுக்கப்படக் கூடாது. எனவே, இம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை இன்னும் தாம திக்காமல் சமூக நீதி மற்றும் உறுதி யான நடவடிக்கையை வழங்கு வதற்காக இம்மசோதா மூலம் மிக வும் தேவைப்படும் திருத்த நடவ டிக்கைகள் கொண்டு வரப்படு கிறது. எனவே இந்தச் சட்டம் “குருமா, குருமன், குரும்பா, குரு மன் கவுண்டர், குரும்பன் மற்றும் குரும்பர்”ஆகிய மக்களை குரு மன்ஸ் என பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டி இம்மசோதா முற் படுகிறது. இவ்வாறு டி.என்.வி.எஸ். செந்தில் குமார் எம்.பி.,பேசினார்.