districts

img

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கண்ட தனியார் எஸ்டேட் ஊழியர்கள்

சேலம், மே 27 – போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி வரும் தனி யார் எஸ்டேட் ஊழியர்களின் செயலுக்கு சுற்றுலா பயணிகள்  பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஏற்காட்டில் நடைபெறும் கோடை விழா மற்றும் மலர் கண் காட்சியை முன்னிட்டு தமிழகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப்  பயணிகள் அதிகளவில் குவியத் தொடங்கியுள்ளனர். கடந்த ஒரு வாரமாக ஏற்காடு முழுவதும் சுற்றுலாப் பயணிக ளின் வருகையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள் ளது. வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டதால், செங்காடு பகுதியில் அமைந்துள்ள திரிவேணி நாவல் எஸ்டேட் நிர்வாகம் போக்குவரத்தைச் சீர் செய்ய ஆறு  ஊழியர்களை நியமித்தது. இந்த ஊழியர்கள் ஏற்காடு குப்ப னூர் சாலையில் செல்லும் வாகனங்களை ஒழுங்கு படுத்தி, சுற்றுலாப் பயணிகள் எளிதாகச் செல்ல வழிவகை  செய்தனர். தனியார் எஸ்டேட் நிர்வாகத்தின் இந்தச் செய லுக்கு ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் மிகுந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் போக்குவரத்து மாற்றம் செய் யப்பட்ட போதிலும், அதிக வாகனங்கள் ஏற்காட்டிற்கு வருவ தால் தற்போது ஏற்படும் வாகன நெரிசலைக் குறைக்க தனி யார் எஸ்டேட் நிர்வாகத்தின் இந்த முன்முயற்சிக்கு அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுகளைத் தெரிவித்து வரு கின்றனர்.