உடுமலை, நவ.2- ஒன்றிய அரசு சார்பில் விவசாயிக ளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட் டம் அறிமுகமான நிலையில், விவசாயி களுக்கு முறையாக பணம் வழங்கப்படு வது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந் துள்ளது. விசாயிகளுக்கு பிரதம மந்திரியின் கெளரவ ஊக்கத்தொகை வழங்கப்படு வதாக சொல்லப்படுகிறது. இந்நிலை யில், உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதி விவசாயிகளுக்கு பெயருக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பணம் வருவாதாகவும், சில விவசாயி களுக்கு தற்போது வரை முதன் தவ ணையாக கூட பணம் கிடைக்காமல் உள்ளனர். இது விவசாயிகளிடையே ஏமாற்றம் அடைய செய்துள்ளது. இது குறித்து குடிமங்கலம் பகுதி விவசாயி கள் கூறுகையில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை சில விவ சாயிகளுக்கு வருவது இல்லை. இது குறித்து வேளாண்துறை அதிகாரிகளி டம் கேட்டால், சில ஆவணங்களை இணைக்க சொல்கிறார்கள். வேளாண் துறை அலுவலகத்திற்கு சென்றால், அதிகாரிகள் போர்டல் (இணையதளம்) வேலை செய்யவில்லை என்று சொல்லி அனுப்பி விடுகிறார்கள். மேலும், புதி தாக திட்டத்தில் இணைக்க வேண்டும் என்றாலும் முடியாது என்று அதிகாரி கள் சொல்வது வேதனையாக உள்ளது, என்றனர். விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக சொல்லி விட்டு, நம்ம முடியாத காரணங்களை சொல்லி விவசாயிகளை ஏமற்றும் வேளாண் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இத்திட்டத் தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை களைய வேண்டும். தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஊக்கத் தொகை வழங்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என விவசா யிகள் வலியுறுத்தியுள்ளனர்.