பொள்ளாச்சி, ஜூன் 4- சிறுவர்கள் மற்றும் மாண வர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி னால், அவர்களின் பெற் றோர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுமென, காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்க ளில் அத்துமீறுவோர் மீது, காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து நடவ டிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலை யில் ஆனைமலை தாலுகா பகுதிகளில் நாளுக்கு நாள் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், ஒரு இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணிப்பது, ஓட்டும் உரிமம் இல்லா மல் வாகனத்தை இயக்குவது, பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டுவது உள்ளிட் டவை அதிகரித்து வருகிறது. இதனால், உயி ரிழப்புகளும், அதிகளவிலான விபத்துக ளும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், இதுபோன்ற விபத்து களை தவிர்க்க ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில், பிரதான சாலைகளில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத் தில் மட்டும் இப்பகுதியில் 832 வழக்கு கள் பதிவு செய்து, 70 ஆயிரம் ரூபாய் அபரா தம் வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பகுதிகளில் வாகன சோதனையில் ஈடு படவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ள னர். மேலும், மாணவர்கள், சிறுவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறாமல் இருசக்கர வாக னம், கார் ஓட்டினாலோ, விபத்து ஏற்படுத்தி னாலோ, பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படு மென காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.