கோவை, மார்ச் 23- மக்கள் வாழ்வை தமிழ் நில மெங்கும் சொல்லி வந்த தமுஎகச தலைவர்கள் கவிஞர். நந்தலாலா மற்றும் எழுத்தாளர் நாறும்பூநாதன் ஆகியோரின் மறைவுக்கு தமு எகச-வினர் அஞ்சலி செலுத்தினர். தமுஎகச மாநிலத் துணைத் தலைவரும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக் குழு உறுப்பினருமான கவிஞர் நந்தலாலா உடல்நலக்குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் மாார்ச் 3 ஆம் தேதியன்று கால மானார். இவர் தமிழ்ச்சிறுகதை நூற்றாண்டு விழா, கல்வி உரிமை மாநாடு, மொழியுரிமை மாநாடு, வள்ளலார் 200, வைக்கம் 100 ஆகிய நிகழ்வுகளை முன்னின்று நடத்தியவர். தொலைக்காட்சி விவாதங்களிலும், நேரலைகளி லும், சிறப்பு நிகழ்வுகளிலும் பங் கேற்று மதச்சார்பற்ற, பகுத்தறிவு சார்ந்த, இடதுசாரி கருத்தியலை வலுவாக முன்னெடுத்தவர். திருச்சி மாவட்டத்தின் பண்பாட்டு வரலாற்றில் தவிர்க்கவியலாத ஆளுமையாக, அனைத்துச் சிந் தனைப்பள்ளிகளைச் சேர்ந்தவர்க ளுடனும் இணக்கமான நல்லு றவைப் பேணி, அதை தமுஎகசவின் வளர்ச்சிக்காகத் திறம்படப் பயன் படுத்தியவர் நந்தலாலா. இதேபோன்று, தமுஎகச மாநி லத் தலைவர்களில் ஒருவரும், தமி ழின் மதிப்புமிகு எழுத்தாளருமான நாறும்பூநாதன் கடந்த மார்ச் 16 ஆம் தேதியன்று உடல்நலக்குறை வால் காலமானார். இலக்கிய வட்டத்தில் தீவிரமாக செயல்பட்ட வர். தமுஎகச கோவில்பட்டி கிளை யின் செயலாளராக தனது அமைப்புப்பணியைத் தொடங்கிய அவர் அளப்பரிய பணிகளின் வழி யாக விரைவிலேயே அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்ந்தவர். மறைந்த இருவருக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற் றும் கலைஞர்கள் சங்கம் கோவை மாவட்டக்குழு சார்பில் நினைவேந் தல் நிகழ்வு ஞாயிறன்று கோவை பீளமேடு, ஹோப் காலேஜ் அரு கிலுள்ள தோழர் ரமணி இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, தமுஎகச மாவட்டத் தலைவர் தி. மணி தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் அ.கரீம், மாநிலக் குழு உறுப்பினர் மு.ஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.பானுமதி, மூத்த தமுஎகச தோழர் கவிஞர் திருமூர்த்தி ஆகி யோர் அஞ்சலி உரையாற்றினர். முடிவில் சிங்காநல்லூர் கிளைச் செயலாளர் எம்.காளிநாதன் நன்றி கூறினார். நாமக்கல் இதேபோன்று, தமுஎகச நாமக் கல் மாவட்டக்குழு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. திருச்செங் கோடு ஆஞ்சநேயர் கோவில் வீதி யிலுள்ள தோழர் காவேரி நினை வகத்தில் ஞாயிறன்று நடை பெற்ற நிகழ்வில், எழுத்தாளர்கள் தோழர் நந்தலாலா மற்றும் தோழர் நாறும்பூநாதன் ஆகியோருக்கு புக ழஞ்சலி செலுத்தப்பட்டது. முன்ன தாக இந்நிகழ்விற்கு, சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் க.கோபி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சேகரன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப் பினர் ஏ.டி.கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ரமேஷ்குமார் நன்றி கூறினார்.