districts

அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி மோசடி அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு

சேலம், செப்.24- அரசு வேலை வாங்கித் தருவதா கக்கூறி, மோசடியில் ஈடுபட்டதாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மீது சேலம் மாவட்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டி அருகே உள்ள ஜான்சன்பேட்டை கிழக்குத் தெருவைச் சேர்ந்த முனு சாமி என்பவர், கடந்தாண்டு மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், கோரைப்பாய் நெய்து வியாபாரம் செய்து வரும் எனக்கு, கடந்த 2013 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சராக இருந்த என்.சுப் பிரமணியன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். பெரிய கிருஷ்ண புரம் உண்டு உறைவிடப்பள்ளி விடுதிக்கு 300 பாயும், கருமந்துறை வெள்ளி மலை உண்டு உறை விடப்பள்ளி விடுதிக்கு 400 பாயும் கொடுக்குமாறு அமைச்சர் கூறினார். அதன் பேரில், இரு பள்ளிகளுக் கும் மொத்தம் 900 கோரைப் பாய்களை கொடுத்து, அதற்கான தொகையாக ரூ.90 ஆயிரம் பெற் றுக் கொண்டதாகவும், மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் விடுதிகளுக்கு ஒப்பந்தம் வாங்கிக் கொடுப்பதாக முன்னாள் அமைச் சர் கூறியதால், அவரை அடிக்கடி சந்திக்கும் சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.  மேலும், சேலம் ஆதிதிராவி டர் நலத்துறையில் சமையல் பணிக் காக 80 பேரை எடுப்பதாகவும், அதில் 20 பேருக்கு சேலம் மாவட் டத்தில் பணி ஆணை வழங்க உள்ள தாகவும், இதற்கு எந்தவொரு நேர்முகத் தேர்வும் கிடையாது என்றும், தலா ரூ.3 லட்சம் தருவோர் களுக்கு சமையல் பணி வழங்கு வேன் என்றும் முன்னாள் அமைச் சர் சுப்பிரமணியன் கூறினாராம். அமைச்சரின் வார்த்தையை நம்பி தானும், தனது உறவினர்களும் கடந்த 2015 ஆம் ஆண்டு அக்.28 ஆம் தேதி முதற்கட்டமாக ரூ.15 லட்சத்தை இலுப்பூரிலுள்ள அவ ரது வீட்டில் வைத்து கொடுத் தோம். அதன்பிறகு, மீதித் தொகையை செலுத்துமாறு எங் களை தொந்தரவு செய்ததால், பல இடங்களில் கடன் பெற்று 2015 ஆம் ஆண்டு நவ.5 ஆம் தேதி, சேலத்தில் ரூ.20 லட்சத்தை 2 ஆவது தவணை யாக கொடுத்தோம். அதன்பின் 3 மற்றும் 4 ஆவது தவணையாக ரூ.15 லட்சம் கொடுத்தோம். அந்த வகையில், மொத்தம் ரூ. 65 லட் சத்தை, முன்னாள் அமைச்சர் சுப்பிர மணியனிடம் கொடுத்தோம். ஆனால், பணத்தை வாங்கிக் கொண்டு பல மாதங்களாகியும் வேலை வாங்கிக் கொடுக்காமல் அமைச்சர் அலைக்கழித்தார். இதற்கிடையில், சென்னை வேளச்சேரியில் அமைச்சர் சுப்பிரம ணியன், அவரது மகன், மகள், மனைவி ஆகிய 4 பேரிடம் பணத் தைக் கேட்டதற்கு, சொந்த ஊருக்கு வாருங்கள் தருகிறோம் என்று தெரி வித்தனர். தொடர்ந்து, ரூ.23.50 லட்சத்தை கொடுத்த அமைச்சர் மீதித் தொகையான ரூ.41.50 லட் சத்தை தராமல் அடியாட்களை வைத்து மிரட்டி எங்களை அச்சுறுத் தினார். மேலும், கொலை மிரட்ட லும் விடுத்தார். எனவே, முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மகள், மகன் மற்றும் அடியாட்கள் மீது நடவடிக்கை எடுத்து, நாங்கள் கொடுத்த பணத்தை மீட்டுத்தர வேண்டும், என கோரியிருந்தார். இந்த மனு மீது விசாரித்து நடவ டிக்கை எடுக்க, சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையின ருக்கு உத்தரவிடப்பட்டது. இதைய டுத்து சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், முன்னாள் அதிமுக அமைச்சர் சுப்பிரமணி யன், அவரது மகள் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.