districts

img

9 ஆவது தேசிய கைத்தறி கண்காட்சி

கோவை, ஆக. 7- 9 ஆவது தேசிய கைத்தறி தினத்தைமுன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை கோவை மாவட்ட ஆட்சி யர் கிராந்தி குமார் பாடி துவக்கி வைத்தார். கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில், கைத் தறித் துறையின் சார்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை துவங் கியது. ஆட்சியர் கிராந்தி குமார் பாடி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மோ. ஷர்மிளா, பொள்ளாச்சி சார் ஆட்சியர் சி. பிரியங்கா கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் வக்குமார், மற்றும்  அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.  இதனைத்தொடர்ந்து ஆட்சியர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், ஆட்சியர் வளாகத்தில் கோயம்புத்தூர் சரகத்தி லுள்ள அனைத்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யும் ஜவுளி இரகங்களை காட்சிப் படுத்தி 20 சதவிகிதம் அரசு தள்ளுபடி விற்பனை  செய்யப்பட்டது. கைத்தறி தினத்தன்று நாம் அனைவரும் கைத்தறி துணிகளை அணிந்து  கைத்தறி நெசவாளர்களை கவுரவிப்ப துடன்கைத்தறி ஆடைகளின்விற்பனையை மேம்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை தரம் உயர்த்திட வேண்டும் என்றார்.  இதேபோன்று, சேலம் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் தமிழ்நாடு கைத்தறித்துறை சார்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும்  விற்பனையை  சேலம் ஆட்சியர் கார்மேகம்  துவக்கி வைத்தார். திருப்பூரில் சிறப்பு கைத்தறி கண் காட்சியை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார். ஈரோட்டில், மாநகராட்சி மேயர் சு.நாக ரத்தினம் அவர்கள் முன்னிலையில், தேசிய  கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை யினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால்  சுன்கரா தொடங்கி வைத்தார். இதேபோன்று, தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இந்த கைத் தறி கண்காட்சி மற்றும் விற்பனை இயக்கம்  நடைபெற்றது.