districts

வாடகை நிலுவை: 17 கடைகளுக்கு ‘சீல்’

கோவை, ஆக.29- கோவை மாநகராட்சிக்கு வாடகை  பாக்கி உட்பட ரூ.9 கோடி நிலுவைத் தொகையை செலுத்தாததால், 17 கடைகளை  மூடி அதிகாரிகள் அதிடியாக ‘சீல்’ வைத் தனர். கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் உள்ள கடைகளில் வியாபாரம் செய்பவர்கள் உரிய வாடகை செலுத்த வேண்டும் என்றும், வாடகை செலுத் தாத கடை மீது உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையர்  மு.பிரதாப் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மாநகரம் முழுவதிலும் உள்ள  மாநகராட்சி கடைகள் வாடகை பாக்கி குறித்து  பட்டியல் தயாரிக்கப்பட்டது. கோவை -  அவிநாசி சாலை உப்பிலிபாளையம் சந்திப்பு  பகுதியில், பாஸ்போர்ட் அலுவலகம் அருகே  மாநகராட்சி வணிக வளாகம் உள்ளது. இங்கு  17 கடைகள் மாத வாடகை முறையாக செலுத் தவில்லை. இந்நிலையில், மாநகராட்சி அதி காரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து மாநகராட்சி மத்திய மண்டல  உதவி ஆணையர் மகேஷ் கூறுகையில், இந்த  வணிக வளாகத்தில் உள்ள 17 கடை உரிமை யாளர்கள் வாடகை பாக்கியாக ரூ.4 கோடி யும், சேவை வரி, அபராத கட்டணம் ரூ.5  கோடியும் என மொத்தம் ரூ.9 கோடி நிலு வைத்தொகை செலுத்தாமல் இருந்தனர். இதுகுறித்து உரிய நோட்டீஸ் அனுப்பப் பட்டது. நீதிமன்றத்திலும் வழக்கு விசா ரணை நடந்து வந்தது. தொடர்ந்து இந்த  தொகையை செலுத்த தாமதம் ஆனதால், 17 கடைகளையும் மூடி சீல் வைக்கப்பட்டது. இதில், 2 கடை உரிமையாளர்கள் கடைக் குள் இருந்துகொண்டு வெளியே வர மறுத் தனர். போலீசார் உதவியுடன் அவர் களையும் வெளியேற்றி சீல் வைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டது, என்றார்.