திருப்பூர், ஜன.30- 1948 ஜன.30 ஆம் தேதி தேசதந்தை மகாத்மா காந்தி பயங்கரவாதி நாத்து ராம் கோட்சே வால் படுகொலை செய் யப்பட்டார். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் தேசதந்தை மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட தினம் தியாகிகள் தினமாக கடைப்பி டிக்கப்படுகிறது. இந்நிலையில், 76 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி செவ்வாயன்று திருப்பூர் மாவட்டத் தில் பல்வேறு பகுதிகளில் மத நல்லி ணக்க உறுதி மொழி எடுத்து, நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஊத்துக்குளி: மகாத்மா காந்தியின் 76 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி செவ்வாயன்று ஊத்துக்குளி வட்டம், மொரட்டுப்பாளையத்தில் உள்ள மகாத்மா கந்தியின் சிலைக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊத்துக்குளி தாலுகாக் குழு சார்பில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட் டது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், ஊத்துக்குளி தாலுகா செயலாளர் எஸ்.கே.கொ ளந்தசாமி, வாலிபர் சங்க ஊத்துக் குளி தாலுகாச் செயலாளர் பாலமு ரளி, பொருளாளர் விக்னேஷ், மாண வர் சங்க தாலுகாச் செயலாளர் ஜோதிபாசு, வசந்த், மொரட்டுப்பா ளையம் எம்.ஆர். ரங்கசாமி ஆகி யோர் கலந்து கொண்டனர். அவிநாசி: தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அவிநாசி கிளை சார்பில் பேரூராட்சி அலுவலகம் முன்பு அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வை தலை மையேற்று ஒன்றிய கவுன்சிலர் முத்து சாமி நடத்தினார். இதில் அவிநாசி கிளை ஒருங்கிணைப்பாளர் பழனி சாமி, அப்துல்மஜீத், நிர்வாகிகள் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், சாய் கண்ணன், சமூக ஆர்வலர் ரவிக் குமார், பாபு, தேவி, உட்பட பலர் கலந்து கொண்டனர். சிறுபான்மை நலக்குழுவினர் நினைவஞ்சலி அதேபோல், தமிழ்நாடு சிறு பான்மை நலக்குழுவின் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து நினைவு நாள் அஞ்சலி செலுத்தப்பட் டது. தமிழ்நாடு சிறுபான்மை நலக்கு ழுவின் மாவட்ட செயலாளர் வை. ஆனந்தன், மாவட்டத் தலைவர் முக மது ஜாபர், மாவட்ட நிர்வாகிகள் இப்ராகிம் ஷா, மணி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.