நாமக்கல், ஆக.12- குமாரபாளையம், சின்னா கவுண்டம்பாளையம் பகுதியில் மின் கசிவு காரணமாக ஆறு வீடு கள் முற்றிலுமாக எரிந்து சாம்ப லான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ஆலம் பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட சின்னாகவுண்டம்பாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு, சாந்தா மணி என்பவருக்கு சொந்தமான தொகுப்பு வீடு உள்ளது. இதன் முன்புறம் கீற்று கொட்டகை அமைத்து சமையலறையாக பயன் படுத்தி வருகிறார். இந்நிலையில், வெள்ளியன்று இரவு சுமார் 9 மணி யளவில் சாந்தாமணியின் கீற்றுக் கொட்டகையில் தீ பற்றியுள்ளது. இதனையடுத்து, அருகில் உள்ள 3 கூரை வீடுகளும் பொருள்களோடு முழுமையாக சேதமடைந்து விட்டன. இந்த தீ விபத்தில் மொத்த மாக ஆறு வீடுகள் எரிந்து சாம்ப லானது. தீ விபத்தில் உயிர் சேத மோ, தீக்காயமோ ஏற்படவில்லை என்றபோதும், அன்றாட உழைப் பை நம்பியே வாழும் இம்மக்க ளின் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து நாசமான, பெரும் பொருளாதார நெருக் கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீவிபத்து சம்பவத்தில் மைனா என்பவர் வீட்டை விட்டு வெளியே வரும் போது சிறியதாக அடிபட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். முன்னதாக, பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தில் உள்ள நபர்களை அருகில் உள்ள சின்னா கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, சேலை, வேட்டிகள் வழங்கப் பட்டுள்ளது.
தொடர்ந்து, தீ விபத்தி னால் சேதமடைந்த வீடுகளை மாவட்ட ஆட்சியர் உமா பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங் கப்பட்ட அவசரகால உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார். மேலும், தீ விபத்தினால் பாதிக் கப்பட்டவர்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு புத்தக பை உள்ளிட்டவைகளை வழங்கிட பொறுப்பு அலுவலர் நியமித்து பணிகளை உடனடியாக மேற் கொள்ள அலுவலர்களுக்கு அறிவு றுத்தினார். மேலும், தீ விபத்தி னால் முற்றிலுமாக வீடு சேதம டைந்தவர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் தற்காலிகமாக தங்குவதற்கு தேவையான மாற்று ஏற்பாடுகளை 24 மணி நேரத்திற் குள் செய்து தர வேண்டுமென அலு வலர்களுக்கு அறிவுறுத்தினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு சமையல் பாத்திரங்கள் அடங்கிய தொகுப்பு, வேட்டி, சேலை, பாய், போர்வை, கொசு வலை, கம்பளி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் ரெட் கிராஸ் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. உணவுப் பொருட்கள் வழங்கல் துறையின் சார்பாக 10 கிலோ அரிசி மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப் பட்டது.