நிலவாரப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் 400 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
சேலம், மே 31- சேலத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் 400 காளைகள் மற்றும் 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். சேலம் நிலவாரப்பட்டி மூலக்காடு பகுதி யில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்தனர். இதில் 20 மாவட்டங்களில் இருந்து 400 காளைகளும், 300 மாடுபிடி வீரர் களும் பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டு விழாவில் வெற்றிபெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பட்டு சேலைகள், செல்போன், மிக்ஸி, குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த மாடுகள் மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்க ளுக்கு தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்கு உட் பட்ட நிலவாரப்பட்டியில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றதால், சுற்றி யுள்ள கிராம மக்கள் இந்த ஜல்லிக்கட்டை காண்பதற்காக அதிகளவில் குவிந்தனர். ஜல்லிக்கட்டு விழாவையொட்டி 350 காவலர் கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டி ருந்தனர்.
குடியிருப்பு திட்ட புகார் எண்கள் வெளியீடு
ஈரோடு, மே 31- பிரதம மந்திரி குடியி ருப்பு திட்டத்தின் கீழ் கட்டப் பட்டு வரும் வீடுகள் தொடர் பான புகார்கள் மற்றும் குறை கள் குறித்து தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் கிராம ஊராட்சி பகுதிகளில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டிற்கு கட்டப்பட்டு வரும் வீடுகள் தொடர்பாக ஏதேனும் குறைபாடுகள் மற் றும் புகார்கள் இருப்பின் ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் 0424- 2260494 என்ற தொலைபேசி எண்ணினை தொடர்பு கொண்டு விபரம் தெரிவிக் கலாம் என மாவட்ட ஆட்சி யர் ஹெச்.கிருஷ்ண னுண்ணி தெரிவித்துள்ளார்.
ஊர்க்காவல் படையில் சேர அழைப்பு
நாமக்கல், மே 31- நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது. நாமக்கல் மாவட்ட ஊர்க் காவல் படையில், நாமக்கல் பிரிவிற்கு 8 ஆண்கள், 3 பெண்கள், திருச்செங்கோடு பிரிவிற்கு 12 ஆண்கள், 1 பெண் என மொத்தம் 24 இடங் கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். எவ்வித குற்றப் பின்னணியும் இருக்கக் கூடாது. விருப்பமுள்ளவர் கள், நாமக்கல் காவல் நிலைய வளாகத்தில் உள்ள, ஊர்க்காவல்படை அலுவல கத்தில் விண்ணப்பத்தி னைப் பெற்று, பூர்த்தி செய்து, நேரிலோ அல்லது, தபால் மூலமோ வருகிற ஜூன் மாதம் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள் ளார்.
நான்காவது குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க கோரிக்கை
திருப்பூர், மே 31- நான்காவது குடிநீர் திட்டத்தை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும்படி அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் திருப்பூர் வடக்கு மாநகர மாநாடு கோரியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருப் பூர் வடக்கு மாநகர 12ஆவது மாநாடு ஞாயிறன்று காந்திந கர் அருகே தியாகி பழனிச்சாமி நகரில் மாநகரத் தலைவர் ஈ.வளர்மதி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் கு.சரஸ்வதி மாநாட்டைத் தொடக்கி வைத்தார். செயலாளர் ஆர்.மைதிலி அறிக்கை சமர்ப்பித் தார். இம்மாநாட்டில் சங்கத்தின் மாநகரத் தலைவராக இ.பி. மரிய சிசிலியா, செயலாளராக எஸ். அம்சவள்ளி, பொரு ளாளராக எஸ்.மேரி லீலா, துணைத் தலைவராக சுமதி, துணைச் செயலாளராக வளர்மதி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். இவர்களுடன் மொத்தம் 11 பேர் கொண்ட நிர்வாகக் கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்ககோரி யும், நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் முறை யாக வழங்க கோரியும், நான்காவது குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் தகுதியான அனைவருக்கும் வழங்க வேண்டும் எனக் கோரி யும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் 56 பேர் பங்கேற்றனர். நிறைவாக மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.பானுமதி நிறைவு செய்து வைத்துப் பேசி னார். முடிவில் வி.சுமதி நன்றி கூறினார்.
இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் கைது
தாராபுரம், மே 31- தாராபுரத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய வாலி பரை காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் கட்டுமான நிறுவனத்தில் மணி செல்வன் (27) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மே 24 ஆம் தேதியன்று தான் வேலைபார்க்கும் அலுவலகம் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென் றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, வாக னத்தை காணவில்லை. இதுகுறித்து தாராபுரம் காவல் நிலை யத்தில் புகாரளித்திருந்தார். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், தாராபுரம் - ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர், போலீசாரை பார்த்ததும் வாகனத்தை நிறுத்தாமல் சென்றார். அவரை பிடித்து விசா ரணை நடத்தியதில் அவர், மணிசெல்வனின் இருசக்கர வாக னத்தை திருடியது தெரியவந்தது. மேலும், அவர் ஒட்டன் சத்திரம் அருகே உள்ள ரெட்டியார்சத்திரத்தைச் சேர்ந்த பிரபு என்ற பரத் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து பரத் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப டுத்தி சிறையில் அடைத்தனர்.
பழுதடைந்து நிற்கும் பேட்டரி வாகனங்கள்
திருப்பூர், மே 31- அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்ட குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள் நகரில் ஆங்காங்கே பழுதடைந்து நிறுத்தப் பட்டுள்ளதாக திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் கள் புகார் கூறினர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்ட அரங்கில், சாதாரண கூட்டம் திங்களன்று மாலை நடந்தது. இதற்கு மாநக ராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பாடி, துணை மேயர் பாலசுப்பிரம ணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாநகராட்சி சீர்மிகு நகரம் திட் டத்தில், புதியதாக கட்டப்பட்டுள்ள பழைய பஸ் நிலையத்துக்கு முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் மத்திய பேருந்து நிலையம் என பெயர் சூட்டும் தீர்மானத்தை மேயர் முன் மொழிந்தார். இதையடுத்து, இந்த தீர்மா னத்தை அரசுக்கு அனுப்பி பரிந்துரை செய் யப்படும் எனவும் தெரிவித்தார். இதற்கு, திமுக, மதிமுக, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சியினர் வரவேற்றனர். இதன் பின்னர் கவுன்சிலர்கள் பேசுகை யில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சியில், குப்பை பெறும் பேட்டரி வாகனங்கள் பெறப்பட்டன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட வாகனங்கள் பழுத டைந்து ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட் டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், சுடுகாடு தெருக்கள் உள்ளிட்ட இடங்களில் பேட்டரி வாகனங்கள் நிறுத்தப் பட்டுள்ளன. இதில் ஊழல் நடந்துள்ளது. மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் நீதி விசாரணை நடத்த வேண்டும். இதில் தவறு செய்து, மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்ப டுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கும் மேற்பட்ட வாகனங்களை காணவில்லை. அதன் உதிரி பாகங்களும் இல்லை. பேட்டரி, வாகனங்கள் பற்றாக்கு றையின் காரணமாக வார்டுகளில் குப்பை கள் அள்ளுவதில் சிரமம் ஏற்படுகிறது. வார் டுகளில் குப்பைகள் தேங்கும் நிலையும் உள் ளது என்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு 429 பேட்டரி வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இதில் 192 வாகனங்கள் பயன்பாட்டில் உள் ளன. மண்டல வாரியாக பேட்டரி வாகனங் களை மீண்டும் சீரமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். 1 மற்றும் 4 ஆவது மண்டலங்களில் பேட்டரி வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்ப டுகிறது. பேட்டரி வாகனங்கள் மண்டல வாரி யாக கணக்கெடுக்கப்பட்டு, விரைவில் அனைத்தும் பொதுமக்கள் பயன்பாட் டுக்கு கொண்டு வரப்படும் என மேயர் தெரி வித்தார்.
“அனைவருக்கும் வீடு” திட்டத்தில் மொத்தம் 3,840 வீடுகள் ஒதுக்கீடு
திருப்பூர், மே 31- “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் மொத்தம் 3 ஆயி ரத்து 840 வீடுகள் ரூ.302.39 கோடி செலவில் கட்டி முடிக்கப் பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் “அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் செவ்வாயன்று ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் திருப்பூர் கோட்டம் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் நகர்ப் புற வீடற்ற ஏழைகள் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்க ளுக்கு “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் மொத்தம் 3 ஆயிரத்து 840 வீடுகள் ரூ.302.39 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மேலும், 2 ஆயிரத்து 788 வீடுகளின் கட்டுமானப் பணிகள் ரூ.253.26 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், திருமுருகன்பூண்டி நகராட்சியில் கட்டப் பட்டு வரும் 224 வீடுகள் 18.8 கோடி மதிப்பீட்டில் ஜூன் மாத இறுதிக்குள் முடிவுற்று வீடற்ற ஏழைகளுக்கும் மற்றும் நல்லாறு ஆக்கிரமிப்பாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்ப டும், என்றார்.
பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பதை இடம் மாற்ற மாதர் சங்க பொங்கலூர் ஒன்றிய மாநாடு கோரிக்கை
திருப்பூர், மே 31- தேவனம்பாளையத்தில் பிளாஸ் டிக் கழிவுகள் எரிப்பதை இடம் மாற்ற வேண்டும் என்று அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொங்கலூர் ஒன்றிய மாநாடு வலியு றுத்தி உள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொங்கலூர் ஒன்றிய மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. ஒன்றிய தலைவர் பார்வதி கொடி யேற்றி வைத்து மாநாட்டுக்குத் தலைமை வகித்தார். அகிலா வரவேற் றார். மாவட்ட பொருளாளர் ஷகிலா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். வேலை அறிக்கையை நிஷா முன் வைத்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றி யச் செயலாளர் என்.பாலன், மாதர் சங்க மாநிலத் துணைத்தலைவர் ஜி. சாவித்திரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தேவனம்பாளையம் ஆதிதிரா விடர் காலனி அருகே பிளாஸ்டிக் கழிவு களை எரிப்பதால் அப்பகுதி மக்க ளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. எனவே அங்குள்ள பிளாஸ்டிக் கழிவுகளை எரியூட்டும் இடத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும், வீடில்லாத அனைவருக் கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண் டும். பொங்கலூர் பேருந்து நிறுத்தத் தில் பொதுக்கழிப்பிடம் வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்ப்டடன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் பொங்கலூர் ஒன்றியத் தலைவராக டி.மீனா, துணைத்தலைவராக பார் வதி, செயலாளராக நிஷா, துணைச் செயலாளராக பவித்ரா, பொருளாள ராக வினோ ரஞ்சிதம் மற்றும் 9 பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப் பட்டது.
மின்தடை
அவிநாசி, மே 31- அவிநாசி மின்வாரிய கோட்டத்துக்குட்பட்ட பல் வேறு துணை மின் நிலை யங்களில் புதனன்று (இன்று) பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. இதனால், தட் டான்குட்டை, சொட்டை மேடு, வள்ளிபுரம், அணை பதி, வெங்கமேடு, மேற்கு பதி, தொரவலூர், அவரப் பாளையம், மரியபுரம், எம ராயன் கோயில், கலர்விழி, சொக்கனூர், அபிசேகபுரம், பெரியார் காலணி, குருவா யூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், வடிவேல் நகர், ஐயப்பா நகர், அபிராமி தியேட்டர் ரோடு, அவிநாசி நகர், காளி பாளையம், அனந்தகிரி, ராயர்பாளையம், மருதூர், மகாலட்சுமி நகர், ராஜேஸ் வரி நகர் உள்ளிட்ட பகுதி களில் புதனன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக் கப்பட்டுள்ளது.
விஜயா வாசகர் வட்டத்தின் கி.ரா.விருதுக்கு எழுத்தாளர் அ.முத்துலிங்கம் தேர்வு
கோவை, மே 31- சக்தி மசாலா வழங்கும் விஜயா வாசகர் வட்டத்தின் கி.ரா.விருதுக்கு எழுத்தாளர் அ.முத்துலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள் ளார். இது குறித்து விஜயா வாசகர் வட்டத்தின் பொறுப்பாளர் விஜயா மு.வேலாயுதம் கூறி யிருப்பதாவது, 2022 ஆம் ஆண்டுக்கான சக்தி மசாலா வழங்கும் விஜயா வாசகர் வட்டத்தின் கி.ரா.விருதுக்கு எழுத்தாளர் அ.முத்துலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள் ளார். இந்த விருது ரூ.5 லட்சம் பரிசுத் தொகை யுடன் கூடியதாகும். உலக புத்தக தினத்தில் கோவை விஜயா பதிப்பக வாசகர் வட்டத் தின் சார்பில் கடந்த 7 ஆண்டுகளாக எழுத்தா ளர்கள் ஜெயகாந்தன், மீரா, புதுமைப்பித் தன் ஆகியோரின் பெயரிலும், சிறந்த நூல கருக்கு சக்தி வை.கோவிந்தன் பெயரிலும், சிறந்த புத்தக விற்பனையாளருக்கு வானதி திருநாவுக்கரசு பெயரிலும் விருதுகள் வழங் கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக கடந்த 2 ஆண்டுகளாக கரிசல் மண் எழுத்தா ளர் கி.ராஜ நாராயணன் பெயரில் கி.ரா. இலக்கிய விருது வழங்கப்படுகிறது. சக்தி மசாலா நிறுவனர் துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் இந்த விருதை வழங்கி வருகின்றனர். எழுத்தாளர்கள் கண்மணி குணசேகரன், கோணங்கி ஆகியோர் இது வரை இந்த விருதைப் பெற்றுள்ளனர். இந்த முறை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் இந்த விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருது வழங்கும் விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மு.வேலா யுதம் தெரிவித்துள்ளார். மேலும், 2022 ஆம் ஆண்டுக்கான ஜெய காந்தன் விருதுக்கு, எழுத்தாளர் விட்டல் ராவ், மீரா விருதுக்கு சாகிப்கிரான், புதுமை பித்தன் விருதுக்கு கா.சு.வேலாயுதன், சக்தி வை.கோ. விருதுக்கு ஏ.சாய்ராம், வானதி திருநாவுக்கரசு விருதுக்கு பி.நாக மல்லையா ஆகியோர் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கி.ரா. விருதுக்கு தேர்வு செய்யப்பட் டுள்ள அ.முத்துலிங்கம், இலங்கையில் பிறந்து வளர்ந்தவர். இலங்கை, ஆப்பி ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஐ.நா.வுக்காக பணியாற்றியவர். 2000 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற இவர், தனது மனைவி ரஞ்சனி யுடன் கனடாவில் வசித்து வருகிறார். 1960 முதல் எழுதி வரும் இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். தமிழ்நாடு அரசு விருது, இலங்கை, கனடா அரசுக ளின் விருதுகளைப் பெற்றுள்ளார். கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் என்ற அமைப்பை நிறுவியவர்களில் முதன்மை யானவர். ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். தற்போது டோரண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக் குழுவில் முத்துலிங்கம் முக்கியப் பங்காற்றி வருகிறார்.
தூய்மையான குடிநீர் கேட்டு மனு
ஈரோடு, மே 31- ஈரோட்டில் தூய்மை யான குடிநீர் விநியோகிக் கக்கோரி பொலவபாளை யம் கிராம மக்கள் ஆட்சியரி டம் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், நம்பி யூர் வட்டம், பொலவபாளை யம் கிராமத்திற்குட்பட்டது ஏகாளிகோவில்மேடு. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இதன் அருகில் உள்ள மேட்டுக்கடை மற் றும் மொட்டணத்திலும் பாதுகாக்கப்பட்ட ஆற்று நீர் நீர்த்தேக்க தொட்டி கள் மற்றும் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக் கப்படுகிறது. ஆனால், ஏகாளி கோவில் மேட்டிற்கு கிணற்று நீர் தான் குடிநீர். இந்நீர் கெட்டுவிட்டதால் வேறு வழியின்றி இதனைப் பயன்படுத்துபவர்களுக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி உள்ளிட்ட உடல் உபாதை கள் ஏற்ட்டு சிரமப்படு கின்றனர். இதனால் 2 கி.மீ தூரத்திலுள்ள மேட்டுக் கடைக்கு சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து, பொலவபாளையம் ஊராட்சி மன்ற தலைவர், வட்டார வளர்ச்சி அலுவ லர் நேரில் சென்று விண்ணப் பித்தும் பயனில்லை. எனவே, ஏகாளி கோயில் மேடு கிராமத்திற்கு குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஏற்பாடு செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கெட்டுப்போன தண்ணீருடன் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.