சேலம், பிப்.15- கேரளம் மாநிலத்தைச் சேர்ந்த மிளகு வியாபாரியிடமிருந்து பணம் கொள்ளையடித்த வழங்கில், 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண் டனை விதித்து சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளம் மாநிலம், வடகோடு துறை பகுதியைச் சேர்ந்தவர் வீரா சாமி. மிளகு வியாபாரியான இவர், சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, நாமக் கல் மாவட்டத்தில் கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் மிளகு வாங்கி சென்று வியாபாரம் செய்து வந்தார். இவர் மிளகு வாங்க ஏற்காடு, செம்ம நத்தம், பெரிய கடையைச் சேர்ந்த சண்முகம் என்பவர் இடைத்தரகராக செயல்பட்டு வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி யன்று, வீராசாமியை மிளகு வாங்க டெம்போவில் ஏற்காடு சண்முகம் அழைத்து சென்றார். அங்கு மிளகு கிடைக்கவில்லை. எனவே, கொல்லி மலைக்கு சென்ற நிலையில் அங்கே யும் இல்லாததால் சேலம் திரும்பி னர். கொல்லிமலைக்கு சென்று விட்டு சேலம் திரும்பிய போது, பனமரத்துப் பட்டி ஏரி அருகே சிறுநீர் கழிப்பதற் காக வண்டியை ஓரமாக நிறுத்தும்படி சண்முகம் தெரிவித்தார். அங்கு இறங் கிய சண்முகம் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார். அப்பொ ழுது அங்கு ஆம்னி வேனில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீரா சாமியை தாக்கி விட்டு, அவர் வைத்தி ருந்த ரூ.24 லட்சத்தை கொள்ளைய டித்து சென்றனர். இதுகுறித்து வீராசாமி, பனமரத் துப்பட்டி காவல் நிலையத்தில் புகார ளித்தார். அதன் பெயரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, இதில் தொடர்புடைய ஏற்காடு, வெள்ளக் கடை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், கார்த்திக், இடைத்தரகர் சண்முகம் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்த னர். இடைத்தரகர் சண்முகம் போட்டு கொடுத்த திட்டத்தின் படி இந்த சம்ப வம் நடந்திருப்பது தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணை சேலம் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து இவ்வழக்கை விசா ரித்த நீதிபதி ரவி, குற்றம் சாட்டப்பட்ட பாஸ்கர், கார்த்திக், சண்முகம் ஆகிய 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண் டனையும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் மூன்று பேருக்கு தண்டனை வழங்கிய நீதி பதி, ஒருவர் இறந்துவிட்ட நிலையில், மற்ற 6 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.