உதகமண்டலத்தில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலையில் அமைந்துள்ளது அவலாஞ்சி ஏரி . இந்த ஏரி உள்ள பகுதியில் 1800களில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பனிச்சரிவு என்னும் பொருளுள்ள அவலாஞ்சி என்ற பெயர் உண்டானது. நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி ஏரி ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். ஏரிக்கு அருகிலுள்ள மலைப்பாங்கான பகுதிகளில் மலையேறுவதும், ஏரியில் படகுச் சவாரி மேற்கொள்ளுவதும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் இதர பொழுதுபோக்குகளாகும். மேல் பவானி எனப்படும் பகுதி இத்தகைய மலையேற்றங்களுக்கு உகந்ததாகும். இங்கு அடர்த்தியான காடுகளும் வன விலங்குகளும் உள்ளன.