districts

தருமபுரி: 26 ஆயிரம் பேர் தபால் வாக்களிக்க ஏற்பாடு

தருமபுரி, மார்ச் 25- தருமபுரி மாவட்டத்தில் 5 சட்ட மன்ற தொகுதிகளில் உள்ள மூத்த  குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனா ளிகள் 26,875 பேர் வீட்டிலிருந்த படியே தபால் மூலம் வாக்களிக்க படி வம் 12டி வழங்கி நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  வயது மூப்பு மற்றும் இயக்க குறைபா டுகள் காரணமாக, யாரும் வாக்க ளிக்காமல் இருக்க கூடாது என்பதற் காக, 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த  குடிமக்கள் மற்றும் மாற்றுத்தி றனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்குகளை செலுத்தும் வகையில்,  சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது. தருமபுரி மாவட்டத்தை பொறுத்தவரை, 100 வயதை கடந்த 114 பேர், 85 வயதை கடந்த 13,394 பேர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 13,367 பேர் உள்ளனர். இவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் மூத்த  குடிமக்கள் மற்றும் மாற்றுத்திற னாளிகள் என 26,875 பேர் உள்ள னர். இவர்களுக்கென நியமிக்கப் பட்ட வாக்குச்சாவடி நிலை அலு வலர்கள், 12டி விண்ணப்ப படிவங் களை, சம்பந்தப்பட்டவர்களின் இல் லங்களுக்கே நேரில் சென்று வழங்கி யுள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்களை சேகரித்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்த விரும்புவோர் 12டி விண்ணப்ப படி வங்களை பெற்று பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட அலுவலர் அல்லது பணியாளர்களின், துறைத் தலைவர் சான்று அளித்து மேலொப்பம் செய் யப்பட்டு, சம்மந்தப்பட்ட துறைகளின்  தலைவர்கள் மூலம், தருமபுரி ஆட் சியரிடம் அளிக்க வேண்டும். இப்படி  விண்ணப்பம் செய்யும் யாவருக் கும் அஞ்சல் வாக்குச்சீட்டு வழங்கப்ப டும். இவர்கள் தருமபுரி, அரூர் வரு வாய் கோட்டாட்சியர் அலுவலகத் தில், வரும் ஏப்.9 ஆம் தேதி முதல்  11 ஆம் தேதி வரை செயல்பட உள்ள  தபால் வாக்கு செலுத்தும் மையத் தில், நேரில் வந்து வாக்கினை அங் குள்ள பெட்டியில் செலுத்த ஏற்பா டுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்றனர்.