districts

img

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 1445 வீடுகள் ஆட்சியர் தகவல்

கோவை, செப். 12- கோவை மாவட்டத்தில் கலைஞ ரின் கனவு இல்லம் திட்டத்தின்  கீழ் 2024-25 ஆம் ஆண்டில் 1445 வீடு கள் கட்ட தேர்வு செய்யப்பட்டு வேலை உத்தரவு வழங்கி பணிகள் நடைபெற்று வருகின்றது என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்தார். கோவை மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட,  பெள்ளாதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளின் வீடுகளை நிறைந் தது மனம் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் கிராந் திகுமார் பாடி இந்நிகழ்விற்கு தலை மையேற்று ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளிடம் கலந்துரையாடி னார்.  இதனையடுத்து, ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசின் சார்பில் செயல்படுத்தப்ப டும் திட்டங்கள் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை யின் சார்பில் நிறைந்தது மனம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு முதல மைச்சர், ஊரக பகுதி மக்களின் நலனுக்காகவும், அவர்களின் வாழ்க்கைதரத்தை மேம்படுத்து வதற்காகவும் பல்வேறு திட்டங் களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இதன்ஒருபகுதியாக, “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.  ஊரகப்பகுதியில் உள்ள குடி சைகளை மாற்றி, அனைவ ருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தரு வதுதான் இந்த திட்டத்தின் நோக்க மாகும். அதன்படி, குடிசையில் வசிப்பவர்கள், சேதமடைந்த வீடு களில் வசிப்பவர்கள், பட்டா இருந் தும் சொந்தமாக வீடு இல்லாதவர் கள் என ஏழை, எளிய மக்களை கண்டறிந்து அவர்களுக்கு ஊரக வளர்ச்சி முகமை மூலமாக பாது காப்பான வீடுகள் கட்டி வழங்கப்ப டுகிறது.  இதற்கு அரசின் சார்பில் ரூ.3.50 இலட்சம் வழங்கப்படுகின்றது.  அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின்  கீழ் 2024-25 ஆம் ஆண்டில் 1445 வீடுகள் கட்டுவ தற்கு தேர்வு செய்யப்பட்டு வேலை உத்தரவு வழங்கி பணிகள் நடை பெற்று வருகின்றது. காரமடை வட்டாரத்தில் மட்டும் 435 பயனா ளிகள் இத்திட்டம் மூலம் பயன் பெறவுள்ளனர் என்றார்.  இத்திட்டத்தின் கீழ் பெள்ளாதி ஊராட்சி வெண்மணி நகரில் உள்ள பயனாளியான ஜான்சிராணி ஆட்சி யரிடம் கூறுகையில், இதற்கு முன் ஓட்டு வீட்டில் இருந்துவந் தேன். வீட்டின் மேற்பகுதி சேதம டைந்திருந்தால், மழைக்காலங்க ளில் வீட்டிற்குள் மழைநீர் ஒழுகி யது. இதனால் எங்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இந்நிலையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத் தின் கீழ் நானும் ஒரு பயனாளியாக தேர்வு செய்யப்பட்டு, தற்போது புதியதாக கட்டப்பட்டு வருகிறது. புதுவீடு என்பது கனவாக இருந்த எங்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இது சாத்தியமாகி இருக்கிறது என்றார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சி யர்(வளர்ச்சி) ஸ்வேதாசுமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில் அண்ணா,  இரும் பொறை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி, பெள்ளாதி ஊராட்சி மன்ற தலைவர் பூபதி (எ) குமரே சன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.