districts

img

குண்டும் குழியுமாக ராயக்கோட்டை பேருந்து நிலையம்

கிருஷ்ணகிரி, ஜூன் 7- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை முழுக்க முழுக்க கிராமப்புறங்களை கொண்ட விவசாயம் சார்ந்த பகுதியாகும். ஒன்றுப்பட்ட தருமபுரி மாவட்ட மாக இருந்தபோது, 30 ஆண்டு களுக்கு முன்பு ராயக் கோட்டையில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டது. 

ஓசூர்,தருமபுரி பாலக்கோடு,கிருஷ்ணகிரி, கெலமங்கலத்தில் இருந்து தினசரி ராயக்கோட்டை க்கு வரும் பேருந்துகளில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும்

அதேபோல் தருமபுரி-கிருஷ்ணகிரி, சேலம்-பெங்களூரு செல்லும் விரைவு பேருந்துகளுக்கும் உள்ளூர் நகரப் பேருந்து களுக்கும் ராயக்கோட்டை பேருந்து நிலையத்தில் நான் நின்று செல்வது வழக்கம்.

25 ஆண்டுகளை கடந்து விட்டதால், பேருந்து நிலைய தரை யில் சிமெண்ட் காரை பெயர்ந்து சேரும் சகதியும், பள்ளம், படு குழியுமாக காட்சி யளிக்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் செய்தும் அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை என்று அந்தப் பகுதி மக்க ளும், பேருந்து நிலையத்தில் வணிகம் செய்து வரும் சிறுவியா பாரிகள் கூறுகின்றனர்.

எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலை யிட்டு பேருந்து நிலை யத்தை சீரமைத்து சாலை களை செப்பணிட்டுத்தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராயக்கோட்டை கிளைச் செயலாளர் தூர்வாசன் வலியுறுத்தியுள்ளனார்.