districts

img

காஞ்சிபுரத்தில் வீட்டுமனை கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு

காஞ்சிபுரம், ஜூன் 19 - வீடு மற்றும் வீட்டுமனை கேட்டு காஞ்சிபுரம் ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கத்தை மாற்றுத்திறனாளிகள் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம் நடத்தியது.  

செவ்வாயன்று (ஜூன்18) காவலன் கேட் அருகில் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த இயக்கத்தின் இறுதியில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் 463 மனுக்கள் அளிக்கப்பட்டது.  மாவட்டத்தில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதி காரிகளிடமும் பலமுறை மனு அளித்தும், கோரிக்கைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பதற்கு பதிலாக ஆண்டுக்கணக்கில் மாற்றுத்திறனாளிகள் காக்க வைக்கப்படுகிறார்கள்.

வீடில்லாத அனைத்து மாற்றத்திறனாளிகளுக்கும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிய அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் அவர்களுக்குரிய இடத்தை அளந்து ஒப்படைக்க வேண்டும், தகுதியான மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மகளிர் உரிமை தொகையை அலைகழிக்காமல் வழங்க வேண்டும் உள்ளிட்ட பலகோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது,

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.பி.பாலாஜி தலைமை வகித்தார். இதில், சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ப.சு.பாரதி அண்ணா, மாநிலக்குழு உறுப்பினர் எம்.குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாவட்ட செயலாளர் வி.முனுசாமி, மாவட்ட பொருளாளர் வி.அரிகிருஷ்ணன், தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.ரேவதி உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.