காஞ்சிபுரம், ஏப்.23- காஞ்சிபுரம் ஐயப்பன் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் காஞ்சிபுரம் பணிமனையில் அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு ஏற்பட்ட வாகன விபத்து காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, இது குறித்த வழக்கில் குற்றம் ஏதும் நிரூபிக்கப்படாததால் ஓட்டுநர் சுப்பிரமணியம் வழக்கிலிருந்து விடுவித்து 2018 ஆண்டு தீர்ப்பு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து மீண்டும் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமனம் வழங்க வேண்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பணி வழங்காததால் ஓட்டுநர் சுப்பிரமணியன் தொழிலாளர் நலத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதன் அடிப்படையில் வழக்கினை விசாரித்த தொழிலாளர் நலத்துறை நீதிபதி, ஐந்து ஆண்டுகளாக பணி வழங்காததை கண்டித்தும் அதற்கு ஈடாக ஓட்டுநருக்கு இழப்பீட்டுத் தொகையாக 19 லட்சத்து 66 ஆயிரத்து 354 ரூபாய் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் வழங்கிட உத்தரவு பிறப்பித்தார். தொழிலாளர் நலத்துறை நீதி மன்ற உத்தரவின்படி இழப்பீட்டுத் தொகையை வழங்காததால் அரசு பேருந்து களை ஜப்தி செய்திட நீதிமன்றம் உத்தர விட்டது. அதன்படி காஞ்சீபுரம் பணிமனை யில் இருந்த 2 அரசு பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நோட்டீஸ் ஒட்டி பறி முதல் செய்து அவற்றை நீதிமன்ற வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தினர்.