கள்ளக்குறிச்சி, ஜூன் 22 - கள்ளக்குறிச்சியில் கள்ளச்சா ராயம் குடித்து உயிரிழந்தோர் எண் ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.
140 பேர் கள்ளக்குறிச்சி மருத்து வமனையில் தொடர்ந்து உள்நோயா ளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
55 பேர் பலியான விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட் டுள்ள 8 பேரில் 3 பேர் மீது கச்சி ராப்பாளையம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. அதாவது, சாராயத்தில் மெத்தனால் கலந்தவர்கள் என்ற அடிப்படையில் ராமர், சின்னதுரை, ஜோசப் ராஜா ஆகிய இந்த 3 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய் யப்பட்டுள்ளது.
இதுவரை 10 பேர் கைது
இத்துடன், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் 10 பேரை காவல்துறையினர் கைது செய் துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 10 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சாராய வியாபாரி கண்ணு குட்டி, அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் ஆகிய மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் மூன்று பேரையும் வரும் ஜூலை 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டி ருந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சின்னதுரை வெள்ளிக்கிழமையன்று தனிப்படை போலீசாரால் பண்ருட்டி அருகே கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொண்ட விசா ரணையில், மெத்தனால் விற்பனை யில் தொடர்புடைய புதுச்சேரி ஜோசப்ராஜா என்ற குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்த னர். மேலும் விரியூர் லூர்துசாமி, சூசைநாதன், மாதவச்சேரி ராமர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள் ளனர்.
மேலும், இந்த வழக்கில், மரக்கா ணத்தைச் சேர்ந்த மதன்குமார் என்ப வரும், கள்ளக்குறிச்சியை அடுத் துள்ள ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரா என்ற பெண் சாராய வியாபாரியும் கைது செய்யப்பட் டுள்ளனர்.
ஏற்கெனவே கைதானவர்
இவர்களில் மதன்குமார் என்ப வர் கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் எரி சாராயம் அருந்தி 27 பேர் உயிரிழப்புகள் ஏற்பட்ட வழக்கிலும் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.