districts

img

கரூர் மாநகராட்சி 41-வது வார்டு சிபிஎம் வேட்பாளர் எம்.தண்டபாணி வாக்குச் சேகரிப்பு

கரூர், பிப்.2 - திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி  சார்பில் கரூர் மாநகராட்சி 41-வது வார்டில் போட்டியி டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எம்.தண்டபாணி 41-வது வார்டுக்கு உட்பட்ட கணபதி பாளையம் வடக்கு, அன்பு நகர், விக்னேஷ் நகர், ஜீவா நகர், அசோக் நகர், என்.ஜி.ஓ நகர் ஆகிய பகுதி களில் பொதுமக்களிடம் அரிவாள், சுத்தியல், நட்சத்தி ரம் சின்னத்திற்கு வீடு வீடாகச் சென்று வாக்குச் சேக ரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக மாக வரவேற்பு அளித்தனர்.  அப்போது வேட்பாளர் தண்டபாணி கூறுகை யில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 41வது வார்டு மக்க ளின் நீண்ட கால கோரிக்கையான அடிப்படை வசதி கள் உள்ளிட்டவற்றை நிவர்த்தி செய்வதற்கான பணி களில் ஈடுபடுவேன். முறையாக ஆக்கப்பூர்வமான திட்டங்களை பெற்றிட இப்பகுதி மக்கள் தனக்கு அரி வாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து  41-வது வார்டு மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

;