கரூர்,ஜூலை 18- மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் கரூர் மாவட்ட 8 ஆவது ஆண்டு பேரவை மாவட்ட தலைவர் கே.வெள்ளை யன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் பி.மதியழ கன் வரவேற்று பேசினார். மாநில துணைத் தலைவர் ஜி.பஷீர் துவக்கி வைத்துப் பேசி னார். சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.ஜீவா னந்தம் சிறப்புரையாற்றினார். அமைப்பின் மாவட்டச் செயலாளர் வி.பி. கந்தசாமி வேலை அறிக்கையையும் மாவட்ட பொரு ளாளர் ஏ.தியாகராஜன் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநி லச் செயலாளர் எம்.காளியப்பன் நிறை வுரையாற்றினார். பேரவையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக கே.வெள்ளையன், மாவட்ட செயலாளராக வி.பி.கந்தசாமி, பொருளாளராக ஏ. தியாகராஜன் உள்ளிட்ட 9 மாவட்ட துணைச்செயலாளர்கள், மாவட்ட துணை தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஊழியர்களின் உரிமைக்கு உத்தரவாத மளிக்காத முத்தரப்பு ஒப்பந்தத்தை திரும்பப் பெற்று நல அமைப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்தி இறுதிப்படுத்திட வேண்டும். மின் வாரியத்தை பிரிக்க பிறப்பித்த வாரிய உத்தரவு 6 மற்றும் 7, அதை அமலாக்க பிறப்பித்த அரசு உத்த ரவு 32-ஐ திரும்பப் பெற வேண்டும். மருத்துவ செலவை மீளப் பெறுவதில் கால அவகாசம் ஏதும் நிர்ணயிக்கக் கூடாது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டன.