districts

img

கன்னியாகுமரியில் கடல் உள் வாங்கியது; சுற்றுலா படகுகள் தரை தட்டி நின்றன

நாகர்கோவில், ஜுன் 5- கன்னியாகுமரி கடலில் ஜுன் 5 புதனன்று கடல் உள் வாங்கியதால் சுற்றுலா  பயணிகளை விவேகானந் தர் பாறைக்கு ஏற்றிச் செல்லும் படகுகள் தரை தட்டி நின்றன.

புதனன்று  காலை கன்னி யாகுமரி கடல் திடீர் என்று உள் வாங்கி நீர்மட்டம் தாழ்ந்தது. இதனால் கன்னி யாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சுற்றுலா படகுகள் தரைதட்டி நின்றன.

இதனால் கடல் நடு வில் அமைந்துள்ள விவேகா னந்தர் நினைவு மண்டபத்து க்கு காலை 8 மணிக்கு தொடங்கப்பட வேண்டிய படகு போக்குவரத்து தொ டங்கப்படாமல் தடை பட்டது. விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை  அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. இதன் கார ணமாக சுற்றுலா படகு போக்குவரத்து ரத்து செய் யப்பட்டது.  

விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்பு கார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் 2 மணி நேரம் காத்திருந்த சுற்றுலா பயணி கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். காலை 10 மணிக்கு கடல் சகஜ  நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக விவேகானந்தர் பாறைக்கு படகு போக்கு வரத்து தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகில் பயணம் செய்தனர்.