சிதம்பரம், பிப்.1- கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் ஒன்றியம் பொன்னங்கோவில் கிராமத்தில் வசிக்கும் ஏழை மக்கள் குடியிருக்க மனைப்பட்டா வழங்க வலி யுறுத்தி சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலி யுறுத்தப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட உதவி ஆட்சியர், கோரிக்கை குறித்து பரிசீலனை செய்து ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் நிலம் ஆர்ஜிதம் செய்து பட்டா வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி யளித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜதுரை தலைமையில் நடந்த மனு கொடுக்கும் இயக்கத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பி னர் வாஞ்சிநாதன், ஒன்றி யச் செயலாளர் செல்லையா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நெடுஞ் சேரலாதன், சிவராமன், சோமசுந்தரம், ஜெயந்தி, பொன்னங்கோவில் சிபிஎம் கிளைச் செயலாளர், கிராம பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.