கடலூர்,பிப்.28- காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று சத்துணவு ஊழியர் சங்க கடலூர் மாவட்ட மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க கடலூர் மாவட்ட 14-வது மாநாடு வடலூரில் மாவட்ட அமைப்பாளர் ரெங்க சாமி தலைமையில் நடை பெற்றது. மாவட்டத் தலை வர் ரவிச்சந்திரன், மாவட்டச் செயலாளர் அரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை அமைப்பாளர் மோகன ராமமூர்த்தி வரவேற்றார். மாநில துணைத் தலைவர் சாவித்திரி தொடக்க உரை யாற்றினார். மாநில பொதுச் செயலாளர் நூர்ஜகான் சிறப்புரையாற்றினர். மாவட்ட துணைத் தலைவர் கருணாகரன், முன்னாள் மாநில துணைத் தலைவர் புருஷோத்தமன், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்க ராமநாதன், லெனின், அனுசுயா உட்பட பலர் கலந்து கொண்டனர். சத்துணவு ஊழியர்கள் அனைவரையும் முழுநேர அரசு ஊழியராக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளகளுக்கு ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும். அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் சத்துணவு ஊழியர்கள் கல்வி தகுதி அடிப்படையில் தமிழக அரசு பதவி உயர்வு வழங்க வேண்டும். சத்து ணவு ஊழியர்களுக்கு ஓய்வூ தியம் ரூ.7850 வழங்க வேண்டும். உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.