கடலூர், நவ.26- வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ் மண்டலம் காரண மாக கடலூரில் கனமழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்திற்கு புதன்கிழமை ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடல் வழக்கத்தை விட சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.
மீன வர்கள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். கன மழையின் காரணமாக பள்ளி மாணவர்கள் நனைந்தபடியே பள்ளி களுக்கு சென்றனர். மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்ற தால் நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். புதன்கிழமையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் கடலூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு புதன்கிழமை (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்ற ழுத்துடன் கூடிய தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள தால், புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இந்நிலையில் கனமழை காரணமாக புதன்கிழமை (நவ.27) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கள் மற்றும் அனைத்து கல்லூரி களுக்கும் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டார். கடலூர் கடலூரில் கனமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக புதன்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி. ஆதித்யா செந்தில் குமார் விடுமுறை அறி வித்துள்ளார்.