உதகை, ஜூன் 8- பாலஸ்தீனத்தின் மீது கொடூர தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அரசை கண் டித்து உதகையில் மார்க் சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்ரேல், பாலஸ்தீனத் தின் மீது நடத்திய தாக்கு தலில் பல்லாயிரக்கணக் கான அப்பாவி மக்கள் இனப் படுகொலை செய்யப்பட் டதை கண்டித்தும், இஸ்ரே லின் பாசிச நடவடிக்கைக்கு ஆயுதங்களை வழங்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார் பில், சனியன்று உதகை, ஏடிசி திடல் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கட்சியின் தாலுகாச் செயலாளர் ஏ.நவீன் சந்தி ரன் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத் தில், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் ஆசரா, சங்கரலிங்கம், பிங்கர் போஸ்ட் கிளைச் செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
சேலம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட் டம் சார்பில், பயங்கரவாத இஸ்ரேலை கண் டித்து கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலா ளர் காரைக்கால் யூசுப், மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.