districts

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உதகை வரும் கேரளா சுற்றுலா பயணிகள்

உதகை, செப். 16- கேரளாவில் நிபா வைரஸ் பரவலால் பள்ளி கல்லூரி களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, விடுமுறையை பயண்படுத்தி நீலகிரி மாவட்டத்திற்கு அதிக மான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதனை யடுத்து, கேரளா எல்லை சோதனைச் சாவடிகளில் தமிழக  சுகாதாரத் துறையினர் தீவிர ஆய்வுக்கு பின்னரே அனும திக்கின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி கேரளா மாநிலத்தை யொட்டி உள்ளது. கேரளாவில் தற்போது நிபா வைரஸ் பரவல்  அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், கோழிக்கோட் டில்  இருவர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து கேரள மாநி லத்தில் பெரும்பலான பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிக அளவில் கேரளா வாகனங்கள் நீலகிரி மாவட்டம் நோக்கி படையெடுப்பதால் தமிழ்நாடு எல்லையான நடுகாணி மற்றும் எல்லையில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் நீலகிரி மாவட்ட சுகாதா ரத்துறையினர்   வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டு  வருகின்றனர். காய்ச்சலுக்கான அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே அனுமதிக்கின்றனர்.  நீலகிரி மாவட்டத்தில் ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பரவி  வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த  சுகாதாரத் துறை யினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட முழுவ தும் உள்ள மருத்துவமனைகளில் சிறப்பு டெங்கு வார்டு கள் அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.