districts

உடுமலை ஒன்றிய பிரிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளதால் கிராமப் புற வளர்ச்சி பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு

உடுமலை, டிச.31- உடுமலை ஒன்றியத்தை நிர்வாக வச திக்காக இரண்டாகப் பிரித்து  உடுமலை  மற்றும் எரிசனம்பட்டியை தலைமையி டமாகச் செயல்பட வேண்டும் என்ற  கோரிக்கை  பல ஆண்டுகள் கிடப்பில்  உள்ளதை, உடனடியாக நடைமுறைப் படுத்த பொது மக்கள் கோரிக்கை வைத் துள்ளார்கள். உடுமலை ஊராட்சி ஒன்றியம் 1962 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் 38 ஊராட்சிகள் 110க்கும் மேற் பட்ட சிறிய கிராமங்கள் மற்றும் மலை வாழ் மக்கள் குடியிருப்புகளும் என ஒரு  லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட பெரிய ஊராட்சி ஒன்றியமாக உள்ளது. அதிக மக்கள் தொகை மற்றும் அதிக மாகப் பரப்பளவு உள்ளதை தொடர்ந்து நிர்வாக நடைமுறைக்கும் ஒன்றிய பொது நிதி அனைத்து பகுதிக்கும் பர வலாகக் கொண்டு செல்லும் வகையில்  மேற்கு பகுதியான எரிசனம்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு  பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து பொது மக்கள் மற்றும் அரசி யல் கட்சிகளிடம் கருத்துக் கேட்கப்பட் டது. இதன்படி எரிசனம்பட்டி தலைமை யிடமாகக் கொண்ட ஒன்றியத்தில் தேவ னூர்புதூர்,செல்லப்பாளையம், புங்க முத்தூர், ராவணாபுரம், எரிசனம்பட்டி, உடுக்கம்பாளையம், பாப்பனூத்து, கொடுக்கியம், தின்னப்பட்டி, அந்தியூர்,  பூலாங்கிணறு, கணபதிபாளையம், ஆர்.வேலூர், வடபூதிநத்தம், பெரியவ ளவாடி, ரெட்டிபாளையம், தீபாலபட்டி, ஜிலேப்பிநாயக்கன் பாளையம், மொடக்குபட்டி, ராகல்பாவி என இரு பது ஊராட்சிகள்  மற்றும்  40 சிறிய கிரா மங்கள்  9 ஒன்றிய உறுப்பினர் வார்டுக்களும்.  

மேலும் உடுமலை ஒன்றியத்தில்  குறிச்சேரி, சின்னவீரன்பட்டி, பெரிய  கோட்டை, போடிபட்டி, கணக்கம்பா ளையம், கண்ணமநாயக்கனூர், பள்ள பாளையம், குரல்குட்டை, ஆலாம்பா ளையம், ஜல்லிபட்டி, குறிச்சிகோட்டை, குருவப்பநாயக்கனூர், துப்பலப்பட்டி, ஆண்டியகவுண்டனூர், சின்னகுமார பாளையம், மனுப்பட்டி, எலையமுத் தூர், கல்லாபுரம் என 18 ஊராட்சிகள் மற் றும் 74 சிறிய கிராமங்களுக்கு 17 ஒன்றிய  உறுப்பினர் வார்டுகள்  என்ற அடிப்ப டையில் பிரிப்பது என கடந்த 2014 ஆம்  ஆண்டு மாவட்ட ஆட்சியர் தலைமை யில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட் டத்தில்  செயல் திட்ட அறிக்கை உடு மலை ஒன்றியத்தில் ஒப்புதல் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அறிக்கை  தரப்பட்டது. ஆனால் உடுமலை ஒன்றிய  பிரிப்பு என்பது இன்று வரை நடைமு றைப் படுத்தாமல் உள்ளது.  நிர்வாக நடைமுறைக்கும் கிராமங்க ளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் வகையில் இருக்கும் உடுமலை ஒன் றிய பிரிக்க வேண்டும் என்று பொது மக் கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.