districts

img

சிபிஎம் நிதியளிப்பு பொதுக்கூட்டம்

அரியலூர், ஜூலை 15- அரியலூர் அண்ணாசிலை அருகில் மக்கள் கோரிக்கை மாநாடு-பொதுக்கூட்டம்-நிதியளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அரியலூர் ஒன்றிய செயலாளரும், மாவட்ட செயற் குழு உறுப்பினருமான துரை.அருணன் வர வேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.வாலண்டினா, கந்தர்வகோட்டை எம்எல்ஏவும் மாநிலக் குழு உறுப்பினருமான எம்.சின்ன துரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா. மணிவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  வசூல் செய்யப்பட்ட ரூ.5,17,100 நிதியை  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் வழங் கினார். மாவட்ட குழு உறுப்பினர் துரைசாமி  நன்றி கூறினார்.

;