சிபிஎம் நிதி வசூல்
அரியலூர், ஜன.8- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மலங்கன்குடியிருப்பு கிராமத்தில் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாசலம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஏ.ராதா, ஆர்.ரவி மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆர்.ரவீந்தர், எம்.இதய துல்லா ஆகியோர் நிதி வசூல் செய்தனர்.
கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சிராப்பள்ளி, ஜன.8 - மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வெள்ளியன்று இரவு விமானம் ஒன்று வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ண றிவு பிரிவு சுங்க அதிகாரிகள் சோதனையிட்டதில் இராமநாத புரத்தைச் சேர்ந்த ராஜகருப்பன் (58) என்பவரிடம் இருந்து ரூ.12.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், ராஜகருப்பனிடம் தொ டர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசுக் கல்லூரியில் தடுப்பூசி முகாம்
அரியலூர், ஜன.8 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதிதாசன் பல்கலைக்கழக இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக கொரோனா தடுப்பூசி முகாம் செந்துறை சாலையிலுள்ள கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது. இதில் மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பிரித்திவிராஜ் தலைமையிலான மருத்துவக் குழு வினர் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம் 146 பேருக்கு தடுப்பூசி செலுத்தினர். இம்முகாம் இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் இராசமூர்த்தி மேற்பார்வையில், இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கி ணைப்பாளர் வடிவேலன் வழிகாட்டுதலில் நடைபெற்றது.
சாராயம் கடத்தியவர் கைது
சீர்காழி, ஜன. 8- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அகர எலத்தூர் கிராமம் மெயின் சாலையில் போலீசார் வெள்ளி யன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அதில், அவர் காரைக்கால் திரு நள்ளார் மீனவர் காலனியை சேர்ந்த கார்த்திகேயன்(39) என்ப தும், காரைக்கால் பகுதியிலிருந்து 100 மதுபாட்டில்கள் மற்றும் 250 பாக்கெட்டுகளில் பாண்டிச்சேரி சாராயத்தை விற்பனைக்கு கடத்தி வரந்ததும் தெரியவந்தது. போலீசார் கார்த்திகே யனை கைது செய்து சாராயம் கடத்துவதற்கு பயன்ப டுத்திய இரு சக்கர வாகனத்தையும், ரூ.15 ஆயிரம் மதிப்பிலான 100 மதுபாட்டில்கள் மற்றும் 250 சாராய பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
தஞ்சாவூர், ஜன.8 - தஞ்சை கரந்தை கோடியம்மன் கோயில் அருகே, மேற்கு காவல்துறை ஆய்வாளர் சந்திரா தலைமையில், காவல்துறை யினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு இருந்தனர். அப்போது, கும்பகோணத்தில் இருந்து தஞ்சை நோக்கி வந்த ஒரு வேனை மறித்து சோதனை செய்ததில் வேனில் தடை செய்யப்பட்ட புகையிலை 250 மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது. இதை யடுத்து, காவல்துறையினர் வேனை பறிமுதல் செய்து, அதில் வந்த ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த அப்துல் லத்தீப், கும்ப கோணத்தை சேர்ந்த ஆனந்தகுமார், ஜவகர் பாட்சா, லோகநா தன், கார்த்திக் ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மரக்கன்றுகள் நடும் விழா
தஞ்சாவூர், ஜன.8 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் செயல்பட்டு வரும் சமூக சேவை அமைப்பான, பேரை துளிர் நண்பர்கள் அறக் கட்டளை சார்பில், பெருமகளூர் வடபாதி வெள்ளாக்குளக் கரையில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற் றது. பேராவூரணி நகர வர்த்தகர் கழக முன்னாள் பொருளா ளர் எஸ்.ஜகுபர்அலி தலைமை வகித்தார். பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை பொருளாளர் முனைவர் வேத.கரம்சந்த் காந்தி வரவேற்றார். கோகனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத் தலைவர் வ.பாலசுப்பிரமணியன், பொருளா ளர் பெஸ்ட் குமார், பெருமகளூர் பி.கமலநாதன் முன்னிலை வகித்தனர். பேராவூரணி வட்டாட்சியர் த.சுகுமார் மரக்கன்று களை நட்டு விழாவினை தொடங்கி வைத்து பேசினார். இதில், பெருமகளூர் பேரூராட்சி செயல் அலுவலர் புனிதவதி, முன்னாள் பேரூராட்சி தலைவர் மா.சண்முக சுந்தரம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.வாசு, தலைமையாசிரியர் கோவி. தாமரைச் செல்வன், வருவாய் ஆய்வாளர்கள் கமலக் கண்ணன், முத்துக்கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் சிவ மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேம்பு, புங்கன், வாகை உள்ளிட்ட 300 மரக்கன்றுகள் குளக்கரையில் நடப்பட்டன.