districts

விருதுநகர் சந்தை துவரை, உளுந்தம் பருப்பு விலை திடீர் உயர்வு மல்லி விலை சரிவு

 விருதுநகர், பிப்.19- விருதுநகர் சந்தையில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் விலை திடீ ரென உயர்ந்துள்ளது. ஒரே வாரத்தில் திடீ ரென அத்தியாவசிய உணவுப் பொருட்க ளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் இல்  லத்தரசிகள் பெரும் அதிர்ச்சியடைந் துள்ளனர். விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களில் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வரு கிறது. அதில் கடந்த வாரம் 15 கிலோ பாமா யிலின் விலையானது ரூ.1550 என்ற விலைக்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ,5 உயர்த்தப்  பட்டு தற்போது ரூ.1555 என்ற விலைக்கு விற்பனையாகிறது.
மல்லி விலை குறைவு
கடந்த வாரம் 40 கிலோ மல்லி (லையன்  வகை ) ரூ.3400 முதல் 3500 வரை விற்கப் பட்டது. இந்த வாரம் ரூ.200 குறைவு ஏற்பட்டு  ரூ.3200-3300 வரை விற்பனை செய்யப்படு கிறது. இதேபோல் மல்லி ( நாடு) 40 கிலோ  ரூ.3500-4500 வரை விற்கப்பட்டு வந்த நிலை யில், தற்போது ரூ.300 குறைந்துள்ளது. இத னால், மூடை ஒன்று ரூ.3200 முதல் ரூ.3500 என்ற விலைக்கு விற்கப்படுகிறது.
துவரம் பருப்பு
கடந்த வாரம் 100 கிலோ துவரம் பருப்பு  ரூ.10,600 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் ரூ.300 உயர்த்தப்பட்டு ரூ.10,900 என்ற விலைக்கு விற்பனையாகிறது. இதேபோல் துவரம் பருப்பு புதுஸ் நாடு வகை மூடை ஒன்றுக்கு  ரூ.10ஆயிரம் என்ற விலைக்கு விற்கப் பட்டது.இந்த வாரம் ரூ.300 உயர்ந்து ரூ.10300க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உளுந்தம்பருப்பு
கடந்த வாரம் 100 கிலோ உருட்டு உளுந்  தம்பருப்பு ( நாடு) ரூ.10,600 க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.200 உயர்ந்து, தற்போது ரூ. 10,800 க்கு விற்பனையாகிறது. இதேபோல் உருட்டு உளுந்து ( பர்மா எப்.ஏ.க்யூ) மூடை  ஒன்று ரூ.8200க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.400 உயர்த்தப்பட்டு ரூ.8600க்கு விற்பனை யாகிறது. இதேபோல் தொலி உளுந்தம் பருப்பின்  விலையும் கடந்த வாரத்தை விட ரூ.200  உயர்ந்து தற்போது ரூ.9200க்கு விற்கப்படுகிறது.
ஹோட்டலில் இட்லி, தோசை விலை உயரும்
தமிழ்நாட்டில் பலர் காலை, மாலை வேளைகளில் இட்லி, தோசை போன்ற உணவு வகைகளையே உண்டு வருகின்ற னர். தற்போது உளுந்தம் பருப்பு, துவரம்  பருப்பு விலை அதிகரித்த காரணத்தால், வீடுகளில் உள்ள இல்லத்தரசிகள் ஏற்க னவே போடப்பட்ட மாத பட்ஜெட்டை விட  செலவு திடீரென அதிகரித்து விட்ட கார ணத்தால் பெரும் அதிர்ச்சியடைந்தள்ளார். அதேவேளை உணவகங்களில் இட்லி, தோசை, வடை போன்றவற்றின் விலை உய ரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பட்டாணி பருப்பு விலை குறைவு
100 கிலோ பட்டாணி பருப்பின் விலை கடந்த வாரம் ரூ.5900 என விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.100 குறைந்து ரூ.5,800க்கு விற்கப்படுகிறது.
கடலை புண்ணாக்கு
100கிலோ கடலை புண்ணாக்கின் விலை யும் கடந்த வாரத்தை விட ரூ.100 குறைந்து  தற்போது ரூ.5100க்கு விற்பனையாகிறது.பிற அத்தியாவசிய உணவுப் பொருட் களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.