சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர், முத்தால் நாயக்கன்பட்டி – கீழ் ஒட்டம்பட்டி செல்லும் வழியில் உள்ள திருமுருகன் பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது.
வெடிவிபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து சில கி.மீ தொலைவிற்கு வெடிவிபத்தின் அதிர்வை உணர முடிந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதிகளில் இருந்து தீயணைப்புத்துறை வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
இந்த விபத்தால் ஏற்பட்ட பொருள் சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.