விருதுநகர், ஜூன் 21- கல்லூரித் தாளாளர் ஜாமீன் மனுவை திருவில்லி புத்தூர் நீதிமன்றம் வரும் ஜூன் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனி யார் நர்சிங் கல்லூரி தாளா ளர் டாஸ்வின் ஜான் கிரேஸ் மாணவிக்கு வீடியோ கால் மூலம் ஆபாசமாக பேசிய வழக்கில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந் தார். இந்த நிலையில் இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. ஜாமீன் மனுவை விசாரித்த வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி கோபிநாத் விசாரணையை 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.