விழுப்புரம், ஜன. 8- விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கோ.ரமணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- விழுப்புரம் மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் உள்ள 294 கிராமங்களில் நவரை நெல் பயிர், 34 குறு வட்டங்களில் நிலக் கடலை, கரும்பு பயிர்கள், 14 குறு வட்டங்களில் எள் பயிருக்கு காப்பீடு செய்ய அறிவிப்பு செய்யப்பட்டது. மாவட்டத்துக்கு காப்பீட்டு நிறுவனமாக ஏஐசிஎல் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ராபி பருவத்தில் காப்பீடு செய்ய ஏக்கர் ஒன்றுக்கு நெல் (நவரை) ரூ.442, நிலக்கடலை ரூ.394.21, எள் ரூ.143.,75, கரும்புக்கு ரூ.2,568.80 கட்டணமாகச் செலுத்த வேண்டும். அனைத்து ஆவணங்களையும் சரியாக சமர்ப்பித்து, பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக காப்பீடு தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.