districts

img

விலங்கு கடித்து ஆடுகள் பலி - விவசாயிகள் போராட்டம்

உடுமலை, ஜூன் 13 - உடுமலை அருகே கிராமப் பகுதி யில் விலங்கு கடித்து கடந்த சில வாரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளன. இப்பி ரச்சனையில் விலங்கை கண்டு பிடித்து, ஆடுகள் உயிரிழப்பைத் தவிர்த்து விவசாயிகள் வாழ்வாதா ரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திங்கட்கிழமை உடுமலை வட் டாட்சியர் அலுவலகத்தை முற்று கையிட்டு விவசாயிகள் இந்த போராட்டதில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சின்னவீரம்பட்டி, பெரிய கோட்டை ஊராட்சிகளுக்கு உட் பட்ட இந்திரா நகர் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக ஒருவித விலங்கு இரவு நேரத்தில் ஆடு களை கடித்ததால் நூற்றுக்கும் மேற் பட்ட ஆடுகள் உயிரிழந்துபோயுள் ளன. இந்நிலையில் ஞாயிறன்று இரவு இந்திரா நகர் பகுதியில் உள்ள  விவசாயிகள்  நாச்சிமுத்து,  கல்பனா ஆகியோரின் ஆட்டுப்பட் டியில்  விலங்கு புகுந்து அங்கி ருந்த 10க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்துக் குதறி உள்ளது. விலங்கு நடமாட்டம் இருப் பதாக வனத்துறைக்கு தகவல் தெரி வித்தும் இது வரை நடவடிக்கை இல்லை. மேலும் கடந்த  வாரத் தில் நடைபெற்ற ஜமாபந்தியில் வட் டாட்சியர் அலுவலகத்தில் இது  குறித்து, கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதற்கிடையில் தற்போது மீண் டும் இச்சம்பவம்  நடைபெற்றுள் ளது.

இதனால்  ஆவேசமான விவசா யிகள் உரிய தீர்வு கோரி, உயிரி ழந்த ஆடுகளுடன் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறி யதாவது, கடந்த சில மாதங்க ளாகவே பெரியகோட்டை மற்றும் சின்னவீரம்பட்டி ஊராட்சிகளில் ஒரு வித விலங்கு ஆட்டு பட்டிக ளில் புகுந்து ஆடுகளைக் கடித்துக் கொன்று வருகின்றது. தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆடு களை நாசம் செய்துள்ளது. வனத் துறை தரப்பில் புகார் செய்தால், அந்த விலங்கு நாய் என கூறி  வருகிறார்கள். ஆனால், இப்பகுதி யில் நடமாடுவது  சிறுத்தையா அல் லது  நாய்களா என வனத்துறையி னர் உறுதிபடுத்த கண்காணிப்பு கேமராகூட பொருத்தவில்லை.  ஆடுகளைக் கொல்லும்  விலங்கு எது என்று  கண்டுபிடிக்கா மல் இருப்பதால் இப்பகுதியில் தொடர்ந்து ஆடுகள் உயிரிழந்து வருகின்றன. மேலும் எங்களுக்கு இரவு நேரங்களில் வெளியே செல் லவும் பயமாக உள்ளது.  எங்களுக்கும், எங்களுடைய வளர்ப்பு விலங்குகளுக்கும் முழு பாதுகாப்பை உடுமலை வருவாய் மற்றும் வனத்துறையினர் ஏற்படுத்த வேண்டும். உரிய தீர்வு கிடைக்கும் வரை விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்ற னர். இதற்கிடையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் எதிரில் உயிரிழந்த ஆடுகளை சாலையில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது அங்கு வந்த வட்டாட்சியர் கணேசன் மற்றும் வனத்துறையினர் ஆடுகள் உயிரிழந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். உரிய  நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த  நிலையில் போராட்டம் முடிவுக்கு வந்தது.