districts

img

மே 19 - 23 வரை உதகை 125 ஆவது மலர்‌க்காட்சி

உதகை, மார்ச் 31- உதகை 125 ஆவது மலர்‌க்காட்சி, அரசு தாவரவியல்‌ பூங்காவில் மே மாதம் 19 முதல்‌ 23 வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்டத்தில்‌ ஒவ்வொரு ஆண் டும் மே மாதம்‌ கோடை விழா நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளாக காய் கறி காட்சி, வாசனை திரவிய காட்சி, ரோஜா காட்சி, மலர்க்காட்சி, பழக்காட்சி என விமர் சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில்‌, மலர்க்காட்சியைக்‌ காண உலகம்‌ முழுவதி லும்‌ இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பய ணிகள்‌ வருகை புரிகின்றனர்‌. இம்‌மலர்க் காட்சி மற்றும்‌ இதர காட்சிகள்‌ ஆண்டு தோறும்‌, மலர்க்காட்சி மற்றும்‌ பழக்காட்சி குழுவினரால்‌ நடத்துவதற்கான தேதிகள்‌, ஏற்பாடுகள்‌ மற்றும்‌ வரவு - செலவு குறித் தான தீர்மானங்கள்‌ அனைத்தும்‌ நிர்ணயம்‌ செய்யப்பட்டு அதன்படி செயல்படுத்த ஏற் பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறை இயக்குநர்‌ மற் றும்‌ மலர்‌ மற்றும்‌ பழக்காட்சி குழுத்தலை வர்‌, நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும்‌ குழு  உப தலைவர்‌, நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர்‌ மற்றும்‌ குழு செயலாளர்‌, அரசு தாவரவியல்‌ பூங்கா, தோட்டக்கலை உதவி இயக்குநர்‌ மற்றும்‌ குழு இணை செய லாளர்‌, திட்ட இயக்குநர்‌ சிறப்பு பகுதி மேம் பாட்டு திட்டம்‌, மாவட்ட காவல்‌ கண்காணிப் பாளர்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ மற்றும்‌  முக்கிய உறுப்பினர்களை கொண்டு மலர்‌ மற்றும்‌ பழக்காட்சி குழுக்‌கூட்டம்‌ நடை பெறும். இந்தாண்டு மலர்‌ மற்றும்‌ பழக் காட்சி குழுக்‌கூட்டம் உதகை கூடுதல்‌ ஆட்சி யர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ தோட்டக்கலைத் துறை இயக்குநர்‌ மற்றும்‌ குழுத்தலைவர்‌ இரா. பிருந்தாதேவி (இணையவழி மூலம்‌) நீலகிரி மாவட்ட ஆட்சியர்‌ மற்றும்‌ குழு உப தலைவர் சா.ப.அம்ரித்‌ தலைமையில்‌ நடை பெற்றது. அதனடிப்படையில்‌ இந்தாண்டு இம்மா வட்டத்துக்கு உலகின்‌ பல்வேறு பகுதிகளிலி ருந்து வருகை புரியும்‌ சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும்‌ வகையில்‌, நீலகிரி மாவட்டத் தில்‌ 12 ஆவது காய்கறி காட்சி கோத்தகிரியில்  மே 6, 7 ஆகிய தேதிகளிலும், 10 ஆவது வாசனை திரவிய காட்சி கூடலூரில் மே 12  முதல்‌ 14 ஆம் தேதி வரையிலும், 18 ஆவது ரோஜா காட்சி அரசு ரோஜா பூங்காவில் மே  மாதம் 13 முதல்‌ 15 ஆம் தேதி வரையிலும், 125 ஆவது மலர்‌காட்சி உதகை அரசு தாவரவி யல்‌ பூங்காவில் மே மாதம் 19 ஆம் தேதி முதல்‌ 23 ஆம் தேதி வரையிலும், 62 ஆவது பழக் காட்சி குன்னூர்‌ சிம்ஸ்‌ பூங்காவில் மே மாதம் 27,  28 ஆகிய தேதிகளிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இக்கூட்டத்தில், தோட்டக் கலைத்துறை கூடுதல் இயக்குநர் சிவசுப்ர மணிய சாம்ராஜ், தோட்டக்கலை இயக்குநர்‌ கருப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.