குடவாசல், ஜன.30 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றிய பேரவை கூட்டம் ஆலங்குடியில் ஒன்றிய குழு உறுப்பி னர் ஜெ.ஜெயராஜ் தலைமையில் நடைபெற் றது. கூட்டத்தில் வலங்கைமான் அரசு மருத்து வமனை சீர்கேட்டை கண்டித்து பிப்.25 ஆம் தேதி மருத்துவமனை அருகில் பெருந்திரள் போராட்டம் நடத்தப்பட உள்ளது. வலங்கை மான் பகுதியில் பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும். அரசு ஆன்லைன் மூலம் நெல் கொள்முதல் செய்வதை பதிவு செய்ய வேண்டும் என்ற முடிவை திரும்பப் பெற வேண்டும். வலங்கை மான் ஒன்றியத்தில் கிராமப்புற நூறு நாள் வேலை திட்ட பணிகள் நடைபெறாமல் இருக்கிறது. அனைத்து ஊராட்சிகளிலும் உடனே நூறு நாள் வேலையை துவக்கி கிராமப்புற மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வி.எஸ்.கலியபெருமாள், ஒன்றிய செய லாளர் என்.ராதா, மாவட்ட குழு உறுப்பினர் கே.சுப்பிரமணி மற்றும் ஒன்றிய குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.