திருச்சிராப்பள்ளி, ஏப்.4- திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் தளுதாளப்பட்டியை சேர்ந்தவர் கணேசன்(59) இவர் ஸ்ரீரங்கம் சரஸ்வதி கார்டனில் உள்ள அம்மாமண்டபம் பிரிவு உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் வயர் மேனாகப் பணிபுரிந்து வருகிறார். இவர் ஏப்.1-ஆம் தேதி ஸ்ரீரங்கம் ராக வேந்திரபுரம் நவநீதா அடுக்குமாடி குடியிருப் பில் வசிக்கும் சரஸ்வதி என்பவர் வீட்டிற்குச் சென்று மின் கட்டணம் செலுத்தவில்லை எனவே மின்கட்டணத்தை உடனே செலுத்து மாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அவர் மின்கட்டணம் செலுத்தவில்லை. இதைய டுத்து கணேசன் மீண்டும் திங்களன்று சரஸ்வதி வீட்டிற்குச் சென்று மின் கட்டணம் செலுத்தாதால் மின் இணைப்பைத் துண்டித் துள்ளார். இந்நிலையில் கணேசன் அலுவலகத்தில் பணியிருக்கும் போது அங்கு வந்த விவேக் (32) என்பவர் எங்கள் வீட்டில் எப்படி நீ மின் துண்டிப்பு செய்யலாம் என கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி அறைந்துள்ளார். அங்கு பணியிலிருந்த ஊழியர்கள் தட்டிக் கேட்டதற்கு அவர்களையும் தகாத வார்த்தை யில் திட்டி உள்ளார். இதுகுறித்து கணேசன் ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் புகார் அளித் தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விவேக்கை தேடி வரு கின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் துணைத்தலை வர் ரெங்கராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்து மின்ஊழியர் கணேசனை தாக்கியவர்கள் மீது உரிய சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் வியாழக்கிழமை ஸ்ரீரங்கம் ராக வேந்திரா ஆர்ச் அருகில் கண்டன ஆர்ப்பாட் டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.