திருச்சிராப்பள்ளி, டிச.3- கல்வி கூடாரத்தை காவி கூடாரமாக மாற்ற துடிக்கும் பிஎச்இஎல் - டிஏவி பள்ளி நிர்வாகத்தை இந்திய மாணவர் சங்கம் வன்மை யாக கண்டித்துள்ளது. இந்திய மாணவர் சங்க மாநில துணைச் செயலா ளர் ஜி.கே.மோகன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி பிஎச்இஎல் பகுதி யில் செயல்பட்டு வரும் டிஏவி பள்ளியில் மாணவர் களிடம் மதவாதத்தை புகுத்தக் கூடிய வகையில், அந்த பள்ளி நிர்வாகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. படிக்கக் கூடிய மாண வர்களிடம் தனிப்பட்டு மதம் சார்ந்த விசயங்களை திணிப் பதை ஏற்க முடியாது. கல்வி நிலையங்கள் மாணவர்களுக்கு பல்வேறு ஆக்கப்பூர்வமான அறி வியல் மனப்பான்மையை வளர்க்கவும், கற்பிக்கவும் வேண்டுமே தவிர மதத்தின் அடிப்படையில் மாண வர்களை பிளவுபடுத்த கூடாது. தொடர்ச்சியாக இந்த பள்ளி நிர்வாகம், மாண வர்கள் கட்டாயம் சமஸ் கிருதம் கற்க வேண்டும் என வும், அவர்கள் அணியக் கூடிய சீருடையில் இந்து மதத்தின் அடையாளத் தினை பொருத்தியும் உள்ளது. இந்தப் பள்ளியில் நூற்றுக் கும் மேற்பட்ட மாற்று மதத் தைச் சார்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் இது கட்டாய மாக்கப்பட்டது சமூக நீதிக்கு எதிரானது; இது அரசி யல் அமைப்பு சட்டத்தின் மத வழிப்பாட்டு சுதந்திரத் திற்கும், சமய சார்பின் மைக்கும் புறம்பானது. கல்வி கூடாரத்தை காவி கூடாரமாக மாற்ற துடிக்கும் பிஎச்இஎல் - டிஏவி பள்ளி நிர்வாகத்தை இந்திய மாண வர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. எனவே, பள்ளி நிர்வாகத் தின் மீது நடவடிக்கை எடுத்து மாணவர்கள் ஒற்றுமை யோடு கல்வி கற்பதற்கு ஏது வான சூழலை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.