சென்னை, மார்ச் 26 - விடுதி காப்பாளரும், காவல் துறையினரும் இணைந்து மாணவர் களை தாக்கி இருப்பதற்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித் துள்ளது. இது தொடர்பாக மாணவர் சங்கத் தின் மத்தியசென்னை மாவட்டத் தலைவர் சி.மிருதுளா, செயலாளர் லோ.விக்னேஷ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது: சென்னை பச்சையப்பன் கல்லூரி விடுதி மாணவர்கள் அடிப்படை வசதிக ளுக்காக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் பிப்.24 அன்று கோரிக்கைகள் குறித்து விடுதி காப்பாளரிடம் மாணவர்கள் முறையிட்டனர். இதனையடுத்து காவல்துறையினரை வரவைத்து விடுதி காப்பாளரும் சேர்ந்து மாணவர்களை தாக்கியுள்ளனர். இதனால் பிப்.25 மாணவர்கள் உண்ணா நிலை போராட்டம் நடத்தினர். விடுதி காப்பாளரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கல்லூரி முதல்வர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. பச்சையப்பன் கல்லூரியில் காவல் துறையின் அராஜகம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கல்வி நிலை யத்தை சுற்றிலும் காவல்துறை ஆக்கிரமி த்திருப்பது, சிறைச்சாலை போன்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளது. கல்வி வளாகத்திற்குள் புகுந்து மாண வர்களை காவல்துறை தாக்குவது சட்டத் திற்குப் புறம்பானது; மனித உரிமை மீறலாகும். இதுபோன்ற சம்பவங்களை கல்லூரி நிர்வாகங்கள் கண்டுகொள்ளா மல் இருப்பது கண்டனத்திற்குரியது. அடிப்படை வசதி உள்ளிட்ட கல்வி வளாகம் சார்ந்து பல்வேறு பிரச்சனை களை நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ளது. எனவே கல்வித்துறை தலை யிட்டு மாணவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படு வதை தடுக்க வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கல்வி மேம்பாட்டிற்கான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். கல்விநிலையங்களுக்குள் காவல் துறை செல்வதை தடுக்க வேண்டும். மாணவர்கள் அடிப்படை ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க வேண்டும். மாணவர்களின் பிரச்ச னையை உடனடியாக தீர்க்காவிடில், மாணவர்களை திரட்டி போராட்டங்க ளில் ஈடுபடுவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.