திருத்துறைப்பூண்டி, மார்ச் 26 - திருத்துறைப்பூண்டி அருகே தண்டலச்சேரியில் உள்ள அரசு கலைக் கல்லூரி அடிப்படை வசதிகள் தொ டர்பாக திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து ஏற்கனவே சட்டப் பேரவையில் குரல் கொடுத் துள்ள நிலையில், வெள்ளிக் கிழமை உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் டாக்டர் டி.கார்த்திகேயனை சந்தித்து கோரிக்கைகள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வலியுறுத் தினார். இந்த சந்திப்பு குறித்து க.மாரிமுத்து எம்எல்ஏ கூறு கையில், “மிகவும் பின் தங்கிய பகுதியாக உள்ள திருத்துறைப்பூண்டியில் 2011 ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியாக தொடங்கபட்டு 2020-21 இல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யாக செயல்பட்டு வருகிறது. 10.2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கல்லூ ரியில் சுமார் 1300 மாணவ-மாணவிகள் பயின்று வரு கின்றனர். இக்கல்லூரியில் அறிவி யல் சார்ந்த பாடப்பிரிவுகள், ஆய்வகங்கள், நூலகம், கலையரங்கம், குறைவான வகுப்பறைகள், விளை யாட்டு மைதானம் மற்றும் சுற்றுச்சுவர் இன்றி செயல் பட்டு வருகிறது என்பதை முதன்மை செயலாளரிடம் சுட்டிகாட்டினேன். மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு கஜா புயலினால் கல்லூரி முற்றிலுமாக சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது, சேதமடைந்துள்ள கல்லூ ரியை சரிசெய்வதற்கு பொதுப்பணித் துறையின் மூலம் சேத மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பல்கலைக் கழகம் வாயிலாக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் நினைவு படுத்தி கல்லூரியில் உட்கட்ட மைப்பு வசதிகளை ஏற்படுத் திட கோரிக்கை மனு அளித் துள்ளேன். எனது கோரிக்கை களை ஏற்று உரிய நட வடிக்கை எடுப்பதாக உயர் கல்வி முதன்மை செயலாளர் உறுதியளித்தார்” என கூறி னார்.