மதுரை, பிப்.25- தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சப்னா, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக் கல் செய்தார். அதில் “உயர்மட்ட குழுவின் கீழ், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக் கான ஆலோசனை குழு அமைக்க வேண் டும். இந்த குழு ஒவ்வொரு ஆண்டும் மாண வர்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கை களை எடுப்பதோடு, அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக கடந்த 2021 இல் தமி ழக அரசு அரசாணையில் வழிகாட்டுதல் களையும் பிறப்பித்தது. இருப்பினும் பள்ளி களில் மாணவர்களுக்கான பாதுகாப்பு அறி வுரை குழு முறையாக இயங்குவதில்லை. ஆகவே அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கான பாதுகாப்பு அறி வுரை குழுவும் சரியாக இயங்கி பள்ளி மாண வர்களிடையே பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறி யிருந்தார். இந்த வழக்கை செவ்வாயன்று விசா ரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு, “அனைத்து பள்ளிகளிலும் மாண வர்கள் பாதுகாப்பு அறிவுரை குழு அமைக் கப்பட்டுள்ளதா என்பது குறித்த நிலை அறிக்கையை தமிழக அரசுத் தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.