திருச்சிராப்பள்ளி, மே 31 - பொது விநியோகத்தை பலப்படுத்த வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வசம் உள்ள அமுதம் ரேசன் கடை களை கூட்டுறவு துறைக்கு மாற்றக்கூடாது. 12(3) ஒப்பந்தத்தை மீறக் கூடாது. ஒப்பந்தப் படி 2012 ஆம் ஆண்டு பருவகால பணியா ளர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கொள்முதல் பணியில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும். கொள் முதல் நிலையங்களில் நீண்ட நாட்களாக இயக்கம் செய்யாமல் தேங்கிய நெல் மூட்டை களை இயக்கம் செய்யும்போது ஏற்படும் இயக்க இழப்பிற்கு தீர்வு காண வேண்டும். தொழிலாளர் ஆணையரின் (சமரசம்) உத்தரவுப்படி இண்டேன் எரிவாயு பிரிவு ஊழியர்களை காலதாமதம் செய்யாமல் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இண்டேன் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியாளர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக சிலிண்டர் ஒன்றிற்கு கூலியாக ரூ.1.50 வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தியன் ஆயில் நிறுவனம் சிலிண் டர் விநியோகம் செய்ய அனுமதித்துள்ள கூலியை உடனே வழங்க வேண்டும். கணினி பிரிவு ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கிடங்குகளில் பணி செய்யும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தொழிலாளர் களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி, சரண்டர் ஊதியம், எல்டிசியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் செவ்வாய்க் கிழமை திருச்சி மண்டல மேலாளர் அலுவல கம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் வேலு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சங்க மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், சங்க மண்டல செயலாளர் ராசப்பன், மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலாளர் எஸ்.கே.செல்வ ராஜ், அரசு போக்குவரத்து கழக கரூர் மற்றும் திருச்சி பொதுச் செயலாளர் கருணாநிதி ஆகி யோர் பேசினர்.