மன்னார்குடி, பிப்.11 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் - கலைஞர்கள் சங்கத்தின் திரு வாரூர் மாவட்ட தலைவரும் மாநி லக் குழு உறுப்பினரும் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, பட்டதாரி ஆசிரியர் கழகத் தின் முன்னாள் மாவட்ட தலைவரும் கட்சியின் மூத்த தோழருமான இரா. தாமோதரன் மன்னார்குடியில் அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 76. அனைவராலும் ஆர்.டி. என்று அன்போடு அழைக்கப்பட்ட இரா.தாமோதரன் வியாழக்கிழமை ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவின் காரணமாக மன்னார்குடி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட் டார். அங்கு அவருக்கு அளிக்கப் பட்ட அவசர சிகிச்சைகள் பலனின்றி காலமானார். தோழர் இரா.தாமோ தரன் 1980-களின் துவக்கத்தில் அரசு ஊழியர் ஆசிரியர் ஜாக்சா ட்டோ இயக்கத்திலும், 1985 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டீ இயக்க போராட்டத்திலும் பங்கேற்று சிறை சென்றவர். ஆசிரியர் அரசு ஊழியர் இயக்கங்களிலும் ஓய்வூதியர் சங்கங்கள் மற்றும் அனைத்து உழைக்கும் வர்க்க இயக்கங்களி லும் தன்னை முழுமையாக ஈடு படுத்திக் கொண்டு எல்லா போராட் டங்களிலும் பங்கேற்று போராட்ட வாழ்க்கையை நடத்தியவர். மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய தரவர்க்க அரங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு 45 ஆண்டுகளாக கட்சி உறுப்பினராக வாழ்ந்த இரா.தாமோதரன், மார்க்சிய சிந்தனையில் புலமை கொண்டவர். அவரது மறைவு செய்தி அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி இரா.தாமோ தரன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தாமோதர னின் துணைவியார் ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் இராதா தாமோதரன், மகள்கள் சத்யதீபா, நித்தியதாரா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு கட்சியின் சார்பில் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தனர். கலை இலக்கிய பெருமன்றத் தின் மாநில பொதுச் செயலாளர் பேரா இரா.காமராஜ். தமுஎகச மாநில துணைத் தலைவர் நந்தலாலா, துணைப் பொதுச் செய லாளர் களப்பிரன், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜீ.பழனி வேல், ஆர்.குமாரராஜா, பி.கந்த சாமி, கே.தமிழ்மணி, எம்.கலை மணி, இடைக்கமிட்டி செயலாளர் கள் எல்.சண்முகவேலு, ஜி.தாயு மானவன், தர்மலிங்கம், ஜான்கென்னடி, தமுஎகச மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள், அனைத்து அரசு ஊழி யர் சங்க மற்றும் தொழிற்சங்க தலை வர்கள், பொதுமக்கள் அவரது இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.